கடலிலே சேர்ந்திருப்பேன்.
நண்டாய்ப் பிறந்தாலும்...
வளையிலே வாழ்ந்திருப்பேன்.
இரண்டாய்ப் பிறந்ததாலே
துண்டுபட்டு நிக்கேனே!
சூடுபட்ட மனசும்
சொன்னாலும் கேட்கலியே...
வீடுபோக வேணுமுன்னு
வெறிபிடித்து துடிக்குதய்யோ...”
அசந்துபோன, சுந்தரம்மா மேகலையைத் தூக்கி விட்டாள். அவளைச் சுற்றியும் பற்றியும் புலம்பிய டெல்லிக்காரிகளுக்கு ஆறுதல் சொன்னாள்.
“கவலைப்படாதீங்கடி... மனசுல நீண்ட நாளா அடைச்சு வச்சிருந்தது இப்ப உடைச்சிட்டு வந்திட்டு. இதுவும் ஒரு வகையில நல்லதுக்குத்தான். இனிமேல் ஒவ்வொரு வருஷமும், கூட்டி வாங்க... இல்லேன்னா இவளோட இருதயம் பலூன் மாதிரி வெடிச்சுடும்...”
“நேற்று வந்ததும் வராததுமா சிலர் அன்னதானம் நடத்துறதப் பார்த்துட்டு அடுத்த வருஷம் நாமும் அப்படி நடத்தணும்னு சொன்னவளா இப்படி அழுகிறது...”
“அழுகிறவள் தாண்டி மனுஷி. இல்லாட்டி அமுக்கடி கள்ளி. அவள், கதைய என்கிட்டவும்