Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 21 - சாவி
தெய்வம் கொடுக்கற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவாயில்லே."
கெளரியின் இந்த வார்த்தை கனபாடிகளின் மன அடிவாரத்தில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்."
"உண்மைதான்; நியாயந்தான். பாகீரதியின் எதிர்காலம் பற்றி நான் தீர்க்கமா யோசிக்க வேண்டியதுதான்."
யோசித்தார்; இரவெல்லாம் யோசித்தார்.
தூக்கம் இல்லாமல் திண்ணையில் போய் உட்கார்ந்து தெருவில் போய் நின்று, முன்னும் பின்னும் நடந்து, ஆகாசத்தைப் பார்த்து...
நிலா வானம் நிர்மலமாய்த் தெரிந்தது. ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தாகம் நெஞ்சை வறட்டியதால் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தினார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். கிட்டா அயர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
"பாவம், ரொம்ப அலைச்சல் அவனுக்கு!"
செம்பில் ஐலம் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போய், சாக்கடை ஓரமாக உட்கார்ந்து, சிறுநீர் உபாதையை முடித்துக்கொண்டு திரும்பினார். இருள் சூழ்ந்திருந்த மாட்டுக் கொட்டிலில் பசு மாட்டின் கண்கள் மட்டும் பளபளத்தன அதைப் பார்த்துக் கொண்டே வந்தவரின் கால்களைக் கீழே இருந்த வாளி ஒன்று பலமாகத் தாக்கவே, கனபாடிகள் வலி பொறுக்காமல் ‘அப்பா, ராமா!’ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து விட்டார்.
‘ராமா’ என்ற கனபாடிகளின் குரல் கேட்டு அவர் வளர்ப்புச் செல்லம் அணில் குட்டி பயந்து