பரிகாரம் - சித்ரா
இதுவும் திருவாளத்தான் மற்றும் ராஜாவுக்கு இடையே நடக்கும் கதைத்தான் .
ராஜாவின் அம்மா உடம்புக்கு முடியாமல் தன் வாழ்கையின் இறுதி கட்டத்தில் இருந்தார்கள் .ராஜா அவர் அம்மாவுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்க , தனக்கு ஒரு மாம்பழம் வேண்டும் என்றார்.
அவருக்கு மாம்பழம் வாங்க வென்று நாலா பக்கமும் ஆட்கள் பறந்தனர் ,ஆனாலும் அவர்கள் மாம்பழத்துடன் வரும் முன்னே அந்த அம்மாவின் உயிர் பிரிந்தது,ராஜாவுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது , ஆதலால் சில அந்தணர்களை அழைத்து அவர் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ஒரு வழி கேட்டார் , இந்த சந்தர்ப்பத்தை தவறாக பயன் படுத்த எண்ணிய அவர்கள் , ராஜாவிடம் ஆளுக்கொரு தங்க மாம்பழம் செய்து கொடுத்தால் தோஷம் நீங்கி விடும் என்றனர் .
ராஜாவும் அது போல செய்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்தார் .
இதை கேள்விப்பட்ட திருவாளத்தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணி தகுந்த சந்தர்பத்துக்கு காத்திருந்தான் . ஒரு நாள் அவன் அம்மாவும் மரணம் அடைந்தார் , உடனே அதே அந்தணர்களை தன் வீட்டிற்க்கு அழைத்தான் ,,முதலில் அவர்களுக்கு விருந்து படைத்தான் , அடுத்து அவர்களை ஒவ்வொருவராக ஒரு ரூமுக்கு தனியே அழைத்து போய் , சூட்டுகோல் போட்டு அனுப்பினான் .அவர்கள் இதை அரசரிடம் போய் முறை இட்டனர் , அரசரும் திருவாளத்தானை அழைத்து விசாரித்தார் .
அவன் கூறிதாவது .... அரசே என் அம்மாவிற்கு காக்க வலிப்பு நோய் உண்டு , அன்றும் அது வந்தது , அதற்கு சூட்டு கோல் போட்டு இழுத்தால் சரி ஆகி விடும் , ஆனால் அப்படி நான் போடும் முன்னே அம்மாவின் உயிர் பிரிந்தது , அதனால் தான் அவர்களை அழைத்து பரிகாரம் செய்தேன் என்றன் அப்பாவியாக .
ராஜாவுக்கும் ,அந்த அந்தணர்களுக்கும் தாங்கள் செய்த தவறு புரிந்தது, அவர்களும் இது போல் தவறை இனி ஒரு போதும் செய்வதில்லை என்று வாக்கு கொடுத்தனர் , ராஜாவும் தன மூட நம்பிக்கையை விட்டார் .
*Image used for illustration only!!!
{kunena_discuss:875}