(Reading time: 13 - 25 minutes)

ஏனோ தானோவென பதில் சொல்லிக் கொண்டிருந்த பிரதன்யா இப்பொழுது சற்றே பயத்துடனும் நடுக்கத்துடனும் சோஷியல் என்று முணுமுணுத்தாள்..

பிடிக்காத சப்ஜெக்ட் என்னவென்று தானே கேட்டோம்.. இதற்கு ஏன் இந்த நடுக்கம் என்பது போல் அவளை கூர்ந்து கவனித்தவர்,”அந்த சப்ஜக்ட் டீச்சர் பெயர் என்ன..??”,அடுத்த கேள்வியாய்..

பதில் சொல் இயலாமல் இப்பொழுது வெளிப்படையாகவே நடுங்கத் துவங்கினாள் பிரதன்யா..

அவள் நடுக்கத்தை அவர் கண்டுகொள்ளாதது போல்,“என்னடா சைலன்ட் ஆயிட்ட.. அந்த டீச்சர் அவ்ளோ டெரர்ரா..??”,என்று கேட்டார்..

இந்தக் கேள்விக்கு உடல் நடுங்கி வேர்க்கத் துவங்கியது குழந்தைக்கு..

அவளது தோளை லேசாக தொட்டவர்,”என்னடா ஆச்சு இப்படி நடுங்கற..??”,என்றார் பரிவாய்..

“.......................”

“என்னமா ஆச்சு.. உன் ப்ரென்ட்டா என்னை நெனச்சுட்டு என்கிட்ட என்னன்னு சொல்லலாம்ல..”

“................”,மீண்டும் மௌனமே விடையாய்..

“என்னமா ஆச்சு...??”,பரிவுடன் தலையை லேசாக கோதியபடியே..

அவ்வளவுதான் அந்த ஒரு மாத காலமாய் தனக்கு நடந்தவற்றை சொல்லத் துவங்கினாள் விசும்பலுடன்..

ஒன்றரை மாதத்திற்கு முன்..

ரே கத்தலும் கூச்சலுமாக இருந்த சிக்ஸ்த் பி பிரிவுக்குள் தலையை கோதியபடி நுழைந்தான் பிரகாஷ்..

அவனைக் கண்டதும் அனைவரும் சற்றே பயத்துடன் எழுந்து நின்றனர்..

“ஸ்டாப் யாரும் இல்லைனா இப்படித் தான் சத்தம் போடுவீங்களா..”,என்று கத்தியவன் கண்களுக்கு எதையோ குனிந்து எடுத்துக்கொண்டிருந்த பிரதன்யா கண்ணில் பட்டதும் சாக் பீஸை எடுத்து அவள் தலை மீது எறிந்து,”ஒருத்தன் இங்க பேசிட்டு இருக்கேன் நீ என்ன தரையைப் பெருக்கிட்டு இருக்க..”,என்றான் கோபமாக..

“சாரி சார்.. பென்சில் கீழே விழுந்திருச்சு அதான்..”,பயத்துடன்..

ம்.. என்று மீண்டும் உறுமியவன் அனைவரையும் அமரும் படி கட்டளையிட்டு விட்டு பாடத்தை நடத்தி முடித்தான்..

அவன் பாடங்கள் நடத்தி முடிக்கும் வரை அங்கு குண்டூசி விழும் சத்தம் கூட கேட்கவில்லை..

“ஓ கே ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு நடத்துனது நாளைக்கு டெஸ்ட்.. டூ இன் அ பெஞ்ச்.. ஸ்டார்ட் ஸ்டடியிங் நவ்..”,என்றான்..

“பிரதி.. என்னடி இந்த சார் செம டெரர் பீஸ் போல..”,புத்தகத்தை எடுத்துக்கொண்டு கடைசி டெஸ்கில் அமர்ந்தபடியே பிரதியிடம் கிசுகிசுத்தாள் அவளது தோழி முகிலா..

“ஆமா டீ.. வந்த செகண்ட் டே வே டெஸ்ட்..”,என்றாள் சலிப்பாய்..

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பேச்சு..??”,என்று தங்களை நெருங்கிய பிரகாஷைக் கண்டு இருவரும் நடுங்கித் தான் போயினர்..

தனக்கு பதில் வராமல் போக,”உங்ககிட்ட தான் நான் பேசறேன்..”,என்றான் குரல் உயர்த்தி..

“ஒன்னும் இல்லை சார்.. இவக்கிட்ட நோட் தான் கேட்டேன்..”,என்ற முகிலை முறைத்த பிரகாஷ்,”சிட் அண்ட் லேர்ன்..”,என்று விட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

அப்பாடா என்றபடி அமர்ந்த முகிலா,”எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்க போறேன்..”,என்று பிரதன்யாவிடம் கிசு கிசுத்து விட்டு கைகளை தாடைக்கு முட்டுக் கொடுத்து படிப்பது போன்ற பாவனையுடன் உறங்கத் துவங்கினாள்..

முகிலாவின் செயலைக் கண்டு சிரிப்பு வந்தாலும் பிரதன்யா அதை அடக்கிக் கொண்டு தனது படிப்பிற்குள் மூழ்கினாள்..

ஒரு வாரம் சென்றிருந்த நிலையில்..

ழக்கம் போல் பிரதன்யாவும் முகிலாவும் கடைசி பெஞ்சில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்..

பிரதன்யா அமர்ந்திருக்கும் சைடில் வந்தவன்,”தள்ளி உட்கார்..”,என்றான் அதிகாரமாக..

ஸ்டுடென்ட்ஸ் ஒரு பெஞ்சில் இரண்டு இரண்டு பேரே அமர்ந்து படிக்கும் நேரத்தில் அவர்களை கவனிக்க ஆசிரியர்கள் சில சமயம் கடைசி இருக்கையில் அமர்வார்கள் என்பதால் பிரகாஷிடம் சரி என்பது போல் தலையாட்டி விட்டு உள்ளே தள்ளி அமர்ந்தாள்..

சில நிமிடங்கள் கடந்திருந்த வேளையில் பிரதன்யாவிற்கு தன் ஷாலின் சைடில் எதுவோ ஊரும் உணர்வு..

சட்டென்று திரும்பி பார்த்தவளுக்கு இரும்பென அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷே கண்ணில் பட்டான்..

ஏதோ போச்சி போல என நினைத்தவள் மீண்டும் தனது புத்தகத்தில் மூழ்கினாள்..

அடுத்த இரண்டாம் நிமிடம் மீண்டும் ஏதோ ஊரும் உணர்வு.. இப்பொழுது சற்றே அழுத்தமாய்..

பயத்துடன் லேசாக திரும்பியவளுக்கு பிரகாஷின் விகாரமான சிரிப்பு அவளை வரவேற்றது..

பயத்துடன் தள்ளி அமரப் போனவளை கைகளை இறுக பிடித்தவன் அவளை முறைத்தபடி இப்பொழுது கைக்கு லேசாக அழுத்தம் கூட்டினாள்..

கண்களில் நீர் முட்ட,”சா..ர்..”,என்றாள் நடுங்கிய படி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.