(Reading time: 12 - 24 minutes)

தண்ணீரைப் பாத்திரத்தில் பார்ப்பதற்கே அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“இதோ வறேன் கீதா, ஆமாம் விஜய் எங்கே. இன்னும் அழுதுட்டுதான் இருக்கானா” என்றான் ராஜேஷ்.

“அழல, ஆனா சோகமா, மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு ஸோபால ஒக்காந்திருக்கான்” என்று கூறிவிட்டு கீதா போக, பெட் ரூமை விட்டு வெளியே வந்தவன் நேரகா சென்று தன் மகனைத் தூக்கி முத்தமிட்டு, மரம் வெட்ட வந்தவர்களிடத்தில் சென்றான்.

“மரத்தை வெட்ட வேணாம், மன்னிச்சிடுங்க. உங்களைத் தேவை இல்லாமல் சிரமபடுத்திட்டேன். வந்ததற்கு கூலி எவ்வளவுனு சொன்னீங்கனா நான் குடுத்துடுறேன்” என்றான் ராஜேஷ்.

 தன் தந்தையின் முடிவைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான் விஜய்.

மரம் வெட்ட வந்தவர்கள் கூலி வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றனர்.

“இப்போவே போய் இன்னும் ஒரு மா கன்று வாங்கிட்டு வந்து இங்க இருக்கிற காலி இடத்தில் நடுவோமா” என்று தன் மகனைப் பார்த்து ராஜேஷ் கேட்க “மை ஸ்வீட் டாடி” என்று தந்தையை அனைத்து முத்தம் கொடுத்தான் விஜய்.

விஜயின் முகத்தில் ஆனந்த சிரிப்பு. அவன் பின்னால் காற்றில் அசைந்து ஆடிய மரமும் சிரித்தது.

இலவசமாகக் காற்றை தரும் மரங்களை அழித்து, காசு கெடுத்து ஏசி வாங்கும் மனிதர்கள் சிந்தனைக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

“மரங்களைக் காப்போம் வளங்களைக் காப்போம்.”  

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.