தாரா... இவ்வளவு பன்னர.. நீங்க மட்டும் இருந்த யாரு இதை எல்லாம் போட்டோபுடிப்பாங்க...!!
ஆமாயில்ல... சரி நாங்க அப்பரம் போட்டோகிராப்பர்...
ஏன்டி.. யாரோ போட்டோகிராப்பர் எல்லாம் பாக்கலாம்.. நாங்க பாக்க்கூடாதா...
சரிம்மா.. தாயே.... என்னோட அவரோட கொஞ்ச நண்பர்கள் மட்டும்... சரியா...
ரொம்ப சூப்பர்...... செமையா இருக்கு.... இதை பன்னுனா என்ன...... தாரா..
கவி.. ஏற்கனவே கல்யாணவீட்டுல செலவுக்கு பஞ்சமில்லை... இதுவேரையா...
இதுக்காக நீ..... வேண்டாம் கவி.. இனி பேச வேண்டாம்...
சரி அதை விடு... மாப்பிள்ளை சார் போன் பன்னுனா பேசரதுக்கு என்னடி....
பேச பிடிக்காம எல்லாம்யில்ல... டைம் இல்ல கவி.. அவருக்கும் வேளையிருக்கும் தானே அதை முடிச்சிட்டு பேசலாம்ன்னு நினைக்கும் போது நான் பிஸி..
நான் வேளை எல்லாம் முடிச்சிட்டு வந்து கால் பன்ன நினைப்பேன்டி.. ஆனா அப்போ அவர் தூங்குன்னா டிஸ்டப்பன்னுன மாறியிருக்கும்ன்னு தான் பேசரதுயில்லப்பா....
அது சரி நல்லஜோடி...... ஏய்.... கொல்லபோரேன் பாரு.....
வழக்கமாக நாட்களும் நகர்ந்த்து...... திருமணநாளும் நெருங்கியது.......
முகூர்த்ததுக்கு முந்தன நாள் மண்டபத்தில் வைத்து நிச்சியம்... கோவிலில் வைத்து தாலி கட்டிட்டு.. மத்த சடங்கு எல்லாம் முடிச்சிட்டு.. நைட் ரிசப்ஷன்..
கல்யாணம் நடக்க ரெண்டுநாள் முன்னாடி தாராக்கு தயா போன் பன்னுனான்.... மேடம் கல்யாணம்னால ஆபிஸ் லீவு சோ தாராளமா பேசலாம்..
தயா விடம் இருந்து போன்வரவே கொஞ்சுண்டு வெட்கம் பூக்க போனை எடுத்தாள்..
ஓய்......
ம்.. சொல்லுங்க...
என்ன பன்ரீங்க மேடம்...
எதும்யில்லைங்க சும்மா தான்...
என்கிட்ட பேச நேரம்யிருக்கா... இல்ல நான் அப்பரம் பேசவா...
என்னங்க இப்படி எல்லாம் பேசரிங்க.....குரலில் சோகம் இருந்த்தை கவனித்தவன்..
நான் சும்மா சொன்னேன் தாரி செல்லம்.. சாரி..சாரி...
நான் தான் சாரி சொல்லனும்....
சரி நேர்ல வந்து சொல்லு....
எ..என்னா....
நேர்ல வந்து சொல்லு செல்லம்.....
நேர்ல எப்படி வர முடியும்.....
ஏன் முடியாது..
சும்மாயிருங்க..... தயா... விளையாடாதீங்க..
நான் உண்மையாத்தான் சொல்லர இன்னைக்கு நைட்.....
கண்டிப்பா முடியாது.... அம்மா கொன்னேபோட்டுருவாங்க.. நான்மாட்டேன்ப்பா.....
சொல்லாம வா....
என்ன ஆச்சு உங்களுக்கு..... என்ன கொள்ளாம விடமாட்டீங்க போல...
நான் ஒன்னாம் விளையாடல்ல... உனக்கு பார்ச்சல் வரும் அதை வாங்கிக்க.. இன்னைக்கு நைட் ரெடியா இரு நான் வந்து உன்ன கூட்டிட்டு போரேன்..
நான் சொல்லரத கேளுங்களேன்.....தயா.... நைட் கேக்கர பை.... என அவளை பேச விடாமல் போனை வைத்து விட்டான்....
இவரு என்ன தான் பன்ன போராரோ....... கடவுளே !! எப்டியாவது காப்பாத்துப்பா.....
மாலை மாப்பிள்ளை வீட்டில் இருந்து சில சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்து முடிந்த்து..
தாராம்மா... சொல்லுங்க அத்தை...
இந்தாம்மா... இதை உன்கிட்ட தரசொல்லி தயா கொடுத்தான்.... அன்னைக்கு துணி எடுக்க போனப்ப மறந்துட்டன்னு சொன்னான்....
சாரி அத்தை... தேங்க்ஸ் அத்தை..
இதுக்கு எல்லாம் ஏன்டா.. சாரி சொல்லர...
சரி இதபாரு உனக்கு பிடிச்சுயிருக்கா.... அவளுடைய கையில் நகை பெட்டியை கொடுத்தார்..
அதில் அழகான நெக்லஸ்செட்டும் அதனுடன் வளையலும் இருந்த்து.....
ரொம்ப அழகா இருக்கு அத்தை.. உனக்கு பிடிச்சு இருக்கு தானே....
ம்..... ரொம்ப.....
உனக்கு இது அழகா இருக்கும்.. செரிமா நாங்க கிளம்பரோம்.... நாளைக்கு சாயங்காளம் மண்டபத்துல்ல பாக்கலாம்...
சரி அத்தை....
அவர்கள் சென்ற உடன் தாராவுக்கு கால்செய்தான்..
என்ன தாரி செல்லம் அம்மா உன்கிட்ட கவர் கொடுத்தாங்களா....
ம் கொடுத்தாங்க.. இதோ அதுல்ல என்ன இருக்குன்னு பாக்கபோரேன்..