(Reading time: 7 - 13 minutes)

எந்தக் குழப்பமும் இல்லாமல் இருக்க, நீங்களே உங்களுக்கு பிடித்த கதையை சொல்லுங்க, திரைக்கதையும் அமைத்துக் கொடுங்க, வசனமும் எழுதுங்க, டைரக்டர் அதை படம் பண்ணிடுவாரு, சரிதானே டைரக்டர்?"

 " ஆமாமாம், படத்தை தூக்கி நிறுத்தப்போறதே, காமெடிதானே! சொல்லப்போனால், இந்தப் படத்துக்கு காமெடியன்சார்தான் ஹீரோ! கதாநாயகனா வேஷம் போடறவரைவிட உங்களுக்குத்தான் ரோல் அதிகம்! இல்லையா, தேவநாதன்?"

 "சந்தேகமில்லாமல்! காமெடியன் சாருக்காகத் தானே வசூலே குவியப்போவுது!"

 " இருங்க, இருங்க! ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கவுத்துருவீங்க போலிருக்கு! எனக்கு வேற யாராவது எழுதினால், குற்றம் கண்டுபிடிப்பேனே தவிர, எனக்கு எழுத தெரியாது, எனக்கு கதையிலே வெயிட் கொடுங்க, எல்லா சீனிலேயும் வரமாதிரி திரைக்கதை வையுங்க, மக்கள் ரசிக்கிறாமாதிரி ஹாஸ்யமா வசனம் எழுதுங்க, மற்றதை நடிப்பிலே நான் அசத்திடறேன், ஒப்பந்தம் அனுப்புங்க, கையெழுத்து போடறேன்"

 தயாரிப்பாளரால் நம்பவே முடியவில்லை. தேவநாதனிடம் ஏதோ ஒரு வசிய சக்தி இருப்பதை ஏற்றுக்கொண்டார்.

 " தேவா! இப்பவாவது கதையை சொல்லுய்யா!"

 " ஐயா! நாட்டிலே ஒவ்வொரு நாளும் நடக்கிற கட்சி அரசியல், கல்விமுறையிலே நடக்கிற குழப்பங்கள், விவசாயிகள் படற கஷ்டம், குடிநீர் பஞ்சம், முக்கியமா மந்திரிங்க குற்றம் செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறதை மாற்றி மாற்றி திரைக்கதை அமைத்தாலே போதும், வசனம் தானா பொருத்தமா அமையும், ரசிகர்களும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மீண்டும் பார்ப்பாங்க!

காலையிலே செய்திகளை கேட்டபின், ஒவ்வொரு நாளும் ஷூட் வைச்சுப்போம், வசனம் நான் எழுத தேவையே இல்லை, நடிகர்களே பொருத்தமா பேசிடுவாங்க........."

 தயாரிப்பாளரும் டைரக்டரும் தேவநாதன் சொல்வதில் உள்ள நடைமுறை யதார்த்தத்தை புரிந்துகொண்டு சிரித்தனர்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.