சிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு! - ரவை
இன்னும் இரண்டே நாட்களில் நடக்கவிருக்கும் புதுமனை புகுவிழாவுக்கு வீடுவீடாகப்போய் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கிக்கொண்டிருக்கும்போது, ரகசியமாக தெரிவிக்கப்பட்ட அந்தத் தகவல், குமாரசாமியின் இதயத்தையே பிளந்தது!
தகவலா அது? கழுத்துக்கு வந்த சுருக்குக் கயிறு!
ஏறக்குறைய எண்பது லட்ச ரூபாய் விழுங்கியிருக்கிறது இதுவரையில், அந்த புதுமனை! இன்னும் இருபது, முப்பது லட்சத்துக்கு வேலை பாக்கியிருக்கிறது!
ஊரே அவனுடைய சாமர்த்தியத்தை மெச்சிப் பாராட்டுகிறது!
இல்லையா பின்னே! எப்பேர்ப்பட்ட இடம்! ஒருபக்கம் மின்சார ரயில் வசதி! இன்னொரு பக்கம் மெட்ரோ! ஒரு பர்லாங்கில் பேருந்து நிலயம்!
அந்த இடத்தை விலைக்கு வாங்க, பெரிய பெரிய முதலாளிகள் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு வீட்டுவாசலில் காத்திருக்கையில், இடத்தின் சொந்தக்காரன் முரளீதரன் பிடிவாதமாக அந்த ஐம்பது கிரவுண்டு காலி மனையை தனது, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த, தன் கம்பெனி ஊழியர்களுக்கு, இருபத்தைந்து பகுதிகளாகப் பிரித்து மலிவான விலைக்கு விற்றதைக் கண்டு ஊரே அதிசயித்தது!
கோடிக்கணக்கில் கறுப்பும் வெளுப்புமாக, எப்படி வேண்டுமானாலும் தருவதற்கு தயாராயிருந்த செல்வந்தர்களுக்கு மறுத்து, வெறும் லட்சங்களுக்கு தன் ஊழியர்களுக்கு தந்த அதிசயத்தைவிட, முந்நூறுபேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து நபர்களில் குமாரசாமியும் ஒருவனாக இருந்ததை பேராச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் ஒரு கூடுதல் அதிசயம் என்னவெனில், பக்கத்து மனைகளைவிட, குமாரசாமியின் மனை இருநூறு சதுர அடி கூடுதல் பரப்பளவு!
குமாரசாமிக்கும் பெருமகிழ்ச்சி. மற்றவர்கள் அவரவர் மனைகளில் வீடு கட்டுவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், இவன் மனையில் அஸ்திவாரம் கட்டி முடிந்துவிட்டது.
குமாரசாமியின் மனையின் இருபக்கங்களிலும் பின்பகுதியிலும் காலி மனை!
குமாரசாமி தனது கிராமத்து பழங்கால பெரிய வீட்டை விற்றும், மனைவியின் நகைகளை அடகுவைத்தும் பணம் திரட்டி
கட்டிடத்தை ஓரளவு முடித்து, புதுமனை புகுவிழாவுக்கும் ஏற்பாடு செய்துவிட்டான்.
செலவோடு செலவாக, அழைப்பிதழ் அச்சிட்டு உறவினரையும் நண்பர்களையும் வீடுவீடாகப் போய் அழைத்துவிட்டான். பந்தல் போட்டு விருந்து பரிமாறவும் தயார் செய்துவிட்டான்.
இந்த நேரத்தில், அவனுக்கு வந்த தகவலைக் கேட்டால்தான், அவன் அடைந்த அதிர்ச்சியை,