(Reading time: 9 - 17 minutes)
Sunset

பிரித்துக்கொண்டு, சண்டையிட்டு, அணுகுண்டு வீசி தங்களை தாங்களே ஏன் அழித்துக்கொள்கிறீர்கள்?

 ஆண், பெண் இரு இனங்களை உலகுக்கு தந்தது, இனப் பெருக்கத்துக்கும், சிற்றின்பத்துக்கும் என நான் நினைத்தேன்! ஆனால், நடப்பது என்ன? பெண் இனத்தையே அடிமைப்படுத்தல், பெண்களை கற்பழித்தல், சிசுக்களைக்கூட விட்டுவைப்பதில்லையே இந்த ஆணினம்! 

 எல்லோர்க்கும் எல்லாம் என்று நான் படைத்த இயற்கைவளங்களை மனிதர்களில் சிலர் வசப்படுத்திக்கொண்டு பலரை வறுமையில் வாட்டி வதைக்கிறார்களே, ஏன்? களவும், கொலையும், ஏமாற்றும், நடக்கின்றனவே, ஏன்?

 மனிதர்களுக்குள்ளே பிரிவு ஏற்படுத்தும் மதங்கள், சாதிகள், இனங்கள், நாடுகள், மொழிகள், ஏன்?

 நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், சிறிதுகூட மனசாட்சியே இல்லாமல், சுயநலமாக நடந்துகொண்டு, கோடீஸ்வரன்களாகி, மக்களை வஞ்சிக்காறார்களே, பகுத்தறிவு படைத்த மனிதர்களா அவர்கள்?

 வயது முதிர்ந்த பெற்றோர்களை, அருகில் இருந்து, பாசமுடன் கவனித்துக்கொள்ள வேண்டிய பிள்ளைகள், முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, எட்டிப் பார்க்காமலே அவர்களை ஏங்கவிடுகிறார்களே, மனசாட்சியை விற்றுவிட்டார்களா? பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பட்ட கஷ்டமெல்லாம், பிள்ளைகளால் ஏன் நினைத்துப் பார்த்து, நன்றியுடன் நடந்துகொள்ள மறுக்கிறார்கள்?

 மற்ற எல்லா தவறுகளையும் குற்றங்களையும் மன்னித்தாலும், ஏதுமறியா குழந்தைகளை தங்கள் இச்சைக்கு பலியாக்கிவிட்டு, அந்தக் குழந்தைகளை கொன்றுவிடுகிற கொடிய செயலை எப்படி மன்னிப்பது?

 இப்படி ஈனத்தனமான ஒரு சமுதாயத்திலே, உங்களால் எப்படி காதலிக்க முடிகிறது? காதல் போன்ற மென்மையான உணர்வுகளுக்கு தகுந்த சூழ்நிலையிலா வாழ்கிறீர்கள்

 இந்த நிலையில், உங்கள் காதலுக்கு நான் உதவி செய்யவில்லையென்று என்னையே வம்புக்கு இழுக்கிறீர்கள்!

 நீயே சொல்! நான் உங்களை படைத்ததின் நோக்கம், நீங்கள் என்னால் படைக்கப்பட்ட வசதிகளையும் உங்களுக்குள்ளே வஞ்சனையின்றி பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதுதானே! அதை நீங்கள் பெருவாரியாக தள்ளிவிட்டு என்மீது குறைப்படுவது, நியாயமா?"

 நான் பதில் ஏதுமின்றி தலை கவிழ்ந்து நின்றேன்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.