செஞ்சு, உங்க உபயோகத்துக்கு திருப்பி எடுத்துக்குங்க! அதை சொல்லத்தாங்க வந்தோம், நாங்க வரோங்க........."
" நில்லுப்பா! நீங்க தண்ணிக்கு என்ன செய்வீங்க?"
" அதை இன்னும் நினைச்சுப் பார்க்கவே இல்லைங்க! முதல்லே, பொதுக்கிணற்றை உங்களுக்கு திருப்பித்தர கடமையை செய்ய ஓடிவந்தோமுங்க!"
" ரொம்ப சந்தோஷம்! ஆனா, நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சாத்தானே, நாங்களும் நிம்மதியா இருக்கமுடியும்?"
" ஐயா! அந்த மாரியாத்தாளும் உங்க நல்ல மனசும் இருக்கிறபோது, எங்களுக்கு வழி கிடைக்காமலா போயிடும்! நாங்க வரோமுங்க! ஐயாவை வழியிலே நிக்கவைச்சு பேசினதுக்கு மன்னிச்சிடுங்க!"
திரும்பிச் செல்கிற கூட்டம், தேவரின் கண்களில் தேவ கணங்களகத் தெரிந்தது!
இப்போது, அவர் மனதில் எழுந்த வினா:
இந்த இரண்டு கூட்டத்தில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது?