நினைவிருக்கா?”
“இப்போ எதுக்கு அதெல்லம் பேசறீங்க”அவள் வெட்கத்தில் தத்தளித்தாள்.
“அன்னைக்கு படியில் விழப்போன உன்னை உன் இடையில் கைப்போட்டு தாங்கினது முதல்….அந்த கூட்டநெரிசல்ல உன்னை உரசி நின்னது முதல்..எதிர்பாராம நீ கொடுத்த முத்தம் முதல் நான் எரிஞ்சிட்டு இருக்கேன் கவி”
“என்னங்க என்னவோ போல பேசறீங்க.நாம கிளம்பலாம் வாங்க”
“இரு கவி.எதுக்கு பயம் நான் தானே….உன் கணவனா வரப்போறவன் தானே…..என் ஆசை உனக்கு புரியலையா.”
“நல்லா புரியுதுங்க…ஆனா இது நேரமில்லை. இது சரியுமில்லை”
“என்ன நேரம் காலம்…ஆசைக்கு அதெல்லாம் இல்லை…..எனக்கு தப்பா தெரியலை…”
“இந்த பேச்சை விடுங்க நாம கிளம்பலாம்”கிளம்ப ஆயத்தமானவளை தடுத்து அவள் கைப்பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
மிரண்டுதான் போனாள் அவள்.
“என்னடீ ரொம்ப பேசற…..உன்னை பார்த்த அந்த நேரத்திலிருந்தே நீ என் மனைவி…எல்லா உரிமையும் இருக்கு எனக்கு”
“கண்டிப்பா உங்க மனைவிகிட்ட உங்களுக்கு உரிமை இருக்கு.ஆனா அதுல அவ விருப்பம் முக்கியம் இல்லையா.இப்போ விருப்பம் இல்லை விடுங்க என்னை”
“ஏன் விருப்பம் இல்லை…உன் பட்டிக்காட்டு தனம் காட்டாதே….உன் ஆசை உன் கண்ணுல தெரியுது.அதன்வெளிப்பாடா தான் எனக்கு முத்தம் கூட கொடுத்த…இப்போ இது மட்டும் ஏன் மறுக்கற”
“ஆமாங்க ஆசை இருக்கு.இப்போ சரியில்லை ன்னு தான் சொல்லறேன்….”
அவள் சொல்லி முடிப்பதற்குள் வேகமாய் அரங்கேற்றினான் அவன் ஆசையின் வேள்வியை..அவன் வேகத்தையும் மோகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தன்னவன் என்ற ஒரே சமாதானத்தில் தன்னை அவனிடம் ஒப்படைத்தாள்.
அரைதூக்கத்தில் இந்த காட்சிகள்அவன் கண்முன்விரிய...அவன் நெற்றியில் இளம்சூடு..கவியின் இதழாகத்தான் இருக்கும்.மனதில் நினைத்தபடி தூக்த்தில் இருந்தான்.
“உங்க கிட்டநிறைய பேச தான் நினைக்கிறேன்.ஆனா முடியலை.நேற்று உங்க மனம் புண் பட்டிருந்தா மன்னிச்சிடுங்க.என் வாழ்க்கையை என் கணவனோட எப்படி வாழனும்ன்னு கனவுகள் பல வச்சிருந்தேனுங்க.அதுல நம்ம திருமண இரவு எப்படி இருக்கனும்னு பெரிய கனவும் அடக்கம்.என் புது வீட்டில் என் கணவரோட அறையில் எந்த பதட்டம் பயம் குற்ற