“என்ன கவி இப்படி அவசரம்….ஏதாவது கோபமா?”என்றவனை ஒரு முறை பார்த்துவிட்டு தன் வேலையை முடித்துக்கொண்டாள்.
“நான் வரேன .பை”
“கவி !கவி!”அவன் அழைப்பு அவள் காதில் வாங்காமலேயே சென்றாள்.
மேஜை மேல் அவன் தொலைபேசி அலறியது.அதன் அடியில் திருமண அழைப்பிதழ் .ஒரு மாத காலம் கழித்து நடக்கவிருக்கும் திருமணம்.மணமகள் கவிதா என்றிருந்தது.அதையே வெறித்து பார்த்தபடி போனை எடுத்தான்.
“என்னம்மா…சரி சரி புலம்பாதே வரேன்”.
நாட்கள் செல்ல செல்ல மதன் தூக்கம் இழந்தான்.அன்று பை சொல்லி போனவள்.மறுமுறை சந்திக்கவும் வரமாட்டேன் என்றாள்.அதன்பின் தொலைபேசி இணைப்பையும் துண்டித்தாள்.அவள் கண்ணீரின் காயம் இவனை புரட்டிப்போட்டது.குற்ற உணர்ச்சியில் நொந்து கொண்டிருந்தான்.
அலைபேசியில் அவன் நண்பண்
“டேய் மதன்..ரெடியா டா…”
“எதுக்கா…நாளைக்கு கல்யாணம்…நினைவிருக்கா…?”
“ம்ம்ம்ம்”
“என்னடா ம்ம்ம்ம்…..கவிதா வாவது நினைவிருக்கா”
“டேய் வெறுப்பேத்தாத…அவ என் கூட பேசி ஒரு மாதம் ஆகுது”
“கல்யாணப்பெண் அவங்க எப்படி பேச முடியும்.இனி உன் கிட்ட என்ன பேச இருக்கு”
“அதுவும் சரிதான்”நீண்ட பெருமூச்சுடன் திருமணத்திற்கு தயாரானான்.
திருமணமண்டபம் கோலாகலமாக இருந்தது.உற்றார் உறவினர் நண்பர்கள் என்று அனைவரும் கூடி மகிழ்ந்து களித்துக்கொண்டிருந்தனர்.திருமணம் வெகு விமர்சையாக கொண்டாடுவதே இது போன்ற சந்தோஷங்களுக்காக தானே.குழந்தைகள் குதூகல்த்துடன் பெரியோர் ஆசிகளுடன் பெற்றோர் பூரிப்புடன் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது.வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தனர் புதுமண தம்பதிகள.இதில் ஒரு உள்ளம் மட்டும் சலனப்பட்டுக்கொண்டிருந்தது.மணப்பெண்ணாய் இருக்கும் கவியின் முகம் தாண்டி அன்று கண்ணீரில் நனைந்த கவியின் முகமே அழுத்தமாய் மனதில் பதிந்தது மதனுக்கு.இன்று எப்படியும் விடை பெற வேண்டுமென்று முடிவெடுத்தான்.
பெண்களின் கேலிகளுக்கும் பெரிசுகளின் சீண்டல்களுமாய் கையில் பால் சொம்பு ஏந்தி அன்ன