சிறுகதை - பாரதி - சமீரா
நேர்முகத்தேர்வுக்கு சென்று வீடு திருப்பும் அவள் மனதில் வேலை கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு எதுவுமில்லை..! அவளை பொறுத்தவரை சிறப்பாகவே தேர்வினை எதிர்கொண்டிருக்கிறாள்..பணம் எனும் மாயவலை விரிக்கப்படாவிட்டால் அவளுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் தான்..! பணத்தை வீசி பதவியைப் பற்றி எடுக்க அவளாளும் முடியும். அவளைப் பொறுத்தவரை ஒருவரின் வாய்ப்பினை தட்டிப்பறிப்பது "உரிமை மீறல்" அவள் அகராதியில் இதற்கெல்லாம் துளியும் இடம் இல்லை.. இது புதிய அனுபவம்..வேலை கிடைத்தால் சந்தோசம்.. கிடைக்காவிட்டால் அதைவிட சந்தோசம்.! எது நடந்தாலும் எதுவும் அவளை பாதிக்க போவதில்லை..இன்று என்பதே உண்மை அதை ரசித்து வாழ்வதே அவள் இலக்கு.. இது தான் நம்ம பாரதி..
"ம்மா" எவ்வளவு நேரமாக காலிங் பெல் அடிக்கிறேன் ப்லீஸ் ஓபன் த டோர் மம்மி..மாதர்ர்ர்..தாய் குலமே என்னமா பண்ற சீக்கிரம் வாம்மா..அலாவுதீன் அற்புத விளக்கு பூதம் கூட வந்துடும் நம்ம சவுன்ட் பொறுக்காமல் நீ வரமாட்ட போலவே..! என பொறுமை என்றால் என்ன விலை என்ற தொனியில் சிறுபிள்ளையாய் கதவருகில் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தாள் பாரதி அந்த ஒரு நிமிட தாமதம் தாளாமல்..
அச்சோ இருடி வாறேன்.. என கூறியபடி கதவை திறந்த கீதா ஏன்டி நீ மாறவே மாட்டியா? ஒரு நிமிசம் லேட் ஆனால் கூட இப்படி காட்டு கத்தா கத்துற.. என செல்லமாய் கடிந்து கொள்ள ..அவளோ கூலாக தப்பு உன் மேல தான் மம்மி..உன் அறுசுவை டீ க்காக தான் ஓடோடி வந்தேன் ..சூப்பரா ஒரு டீ என அவள் கண்சிமிட்ட சிரித்தே விட்டார் கீதா..இருவரும் பேசியபடியே ஹாலிற்கு வர அங்கிருந்த நபரை கண்டதும் பாரதி துள்ளி குதித்தே விட்டாள் அவரும் அதே உற்சாகத்தில்..!
ஆண்டி.!!எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க? ..அம்மா நீ சொல்லவே இல்லை .. நைட் கால் பேசிய அந்த மங்கி வினி.. கூட ஒரு வார்த்தை சொல்லலை.. ஆண்டி லன்ச் நம்ம வீட்டில் தான்..! இன்னைக்கே போய்டுவீங்களா? டூ ஓ த்தீரி டேஸ் ஸ்டே பண்ணலாமே "என அன்போடு மூச்சு விடாமல் பேச அவரோ புன்னகை பூத்தபடி அவள் கேள்விகளுக்கு பதில் கூறினார்..
“நாங்க எல்லோரும் நல்ல இருக்கிறோம்..அப்போ போல அதே கலகலப்பு இப்பவும் மாறவே இல்லை..பார்க்க சந்தோசமாக இருக்குடா..! இன்னைக்கு நைட்டே கெளம்புறோம்.." விஷ்வா" வும் வந்திருக்கான்.. அவன் பிரன்ட்டை மீட் பண்ண போயிருக்கான்.. நெக்ஸ்ட் மன்த் நம்ம வீட்டுக்கே மறுபடியும் வந்துடலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம் என மகிழ்ச்சி பொங்க