(Reading time: 14 - 28 minutes)
Couple

சிறுகதை - நான் யார்? - ரவை

ந்த ஆட்டோ ஸ்டாண்டில் அந்த நேரத்தில் அப்படியொரு கும்பலையோ கூச்சலையோ நான் இதுவரை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை!

என்ன, ஏது என தெரிந்துகொள்ளும் ஆவலில், அருகே சென்று பார்த்தேன்.

 ஒரு நடுத்தர வயது பெண்ணுக்கும் ஒரு ஷேர் ஆட்டோக்காரனுக்கும். இடையே தகராறு!

 " இத பாரும்மா! உன் ஒருத்தியை ஆட்டோவிலே ஏற்றிக்கொண்டால், வேற யாரும் ஏறமாட்டேங்கறாங்க, எனக்கோ, ஆட்டோவிலே ஆறுபேர் ஒரே நேரத்திலே சேர்ந்து சவாரி செய்தால்தான், கட்டுபடியாகும். அருகாமையிலேயே நீங்க இறங்கிவிடுவதாக இருந்தால், பரவாயில்லை நஷ்டமானாலும்னு ஏற்றிக்கொள்ளலாம், நீங்களோ பெரிய அரசு ஆஸ்பத்திரி வரையிலும் பத்து கிலோமீட்டர் தூரம் போகணுங்கறீங்க, அவ்வளவு நஷ்டத்தை என்னால தாங்கிக்க முடியாது, ஆளை விடுங்க!"

" அதெப்படி? ஷேர் ஆட்டோவிலே சவாரி செய்ய எனக்கு உரிமையில்லையா? மற்றவங்க கூட சவாரி செய்யலேன்னா, அதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும்? நான் ஆட்டோவிலிருந்து இறங்கமாட்டேன், தகராறு செய்யாம, ஆட்டோவை எடு! இல்லையா, போலீஸை கூப்பிடு, நியாயத்தைக் கேட்போம்!"

 இதுதான் தகராறு!

அருகிலிருந்தவரிடம் ரகசியமாக விசாரித்தேன்.

" ஏன் மற்றவங்க, இந்த பொம்பளைகூட சவாரி செய்யமாட்டேங்கறாங்களாம்?"

" அதுவா! இந்தம்மா ஒரு பைத்தியங்க! தனக்குத்தானே ஓயாம பேசிக்கிட்டே இருப்பாங்களாம், கோபமா, கைகளை ஆவேசமா அசைத்துக்கிட்டு! அதனாலே, மற்றவங்க பயப்படறாங்க!"

நான் அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். எனக்கென்னவோ, அவளைப் பார்த்தால், முற்றிய பைத்தியமாகத் தெரியவில்லை! பரிதாபமாக இருந்தது!

" இந்தாய்யா ஷேர்ஆட்டோ! உனக்கு ஆறுபேர் சவாரி செய்தால் எவ்வளவு பணம் கிடைக்குமோ, அதை நான் தரேன்! அவங்களை அழைத்துப்போ!"

அந்தப் பெண்மணி என்னைப் பார்த்து ஆவேசமாக கத்தினாள்.

"நீ யாருய்யா எனக்காக பணம் கொடுக்கறதுக்கு? நான் உன்னிடம் பிச்சை கேட்டேனா? போய்யா உன் வேலையை பார்த்துக்கிட்டு!"

அவள் கோபத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிந்தது.

" தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கம்மா! நானும் நீங்க போகவேண்டிய அதே பெரிய அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் போகவேண்டியிருக்கு, அவசரமா! அதனாலே, முழுப் பணத்தையும் நானே தரேன்னு சொன்னேன்" என்று சொல்லிக்கொண்டே, அவள் எதிரில் அந்த ஆட்டோவில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.