(Reading time: 14 - 28 minutes)
Couple

மனசைவிட்டு வெளியேற்ற முயற்சிக்குறீங்க, சரியா?"

 " ரொம்ப கரெக்ட்!"

 " அந்த நகை எப்படி திருட்டுப் போச்சு?"

 " ஒருநாள் குளிக்க பாத்ரும் போவதற்கு முன், காதிலிருந்த தோடுகளை கழற்றி மேஜைமேலே வைத்துவிட்டுச் சென்றேன், குளித்துவிட்டு வந்து பார்த்தால், காணோம்! திக்குனு ஆயிடிச்சி! அம்மாவையும் என்னையும் தவிர, வேற யாரும் வீட்டிலே இல்லாத நேரத்திலே, எப்படி மாயமாய் நகை மறைந்திருக்கும் என்று புரியாமல், அம்மாவிடம் கேட்டேன், அப்போதுதான் தெரிந்தது, அந்த இடைவேளையில் வேலைக்காரி வீட்டுக்குள் ஏதோ வேலையாக வந்துபோயிருக்கிறாள் என்று."

 " அவளை உடனே விசாரிச்சிருப்பீங்களே....?"

 " ரெண்டு லட்ச ரூபா பெறுமான வைரத்தோடாச்சே, பரம்பரையா வந்த நகையாச்சே, வேலைக்காரியை கடுமையா விசாரிச்சேன், ஒரேயடியா தான் எடுக்கவே இல்லைன்னு சாதித்தாள், நான் அதை நம்பமுடியாமல், அவளை வேலையைவிட்டு நீக்கிவிட்டேன்........."

 " வேற எவரும் வீட்டுக்குள் வந்து போகாத காரணத்தினாலே, வேலைக்காரிமீது தானே சந்தேகம் வரும்?"

 "சந்தேகமே இல்லீங்க, உறுதியாகவே சொல்வேன், அவள்தான் திருடியிருக்கணும்"

 " இந்த இரண்டு விஷயத்திலே, அதாவது ஒண்ணு, ரெண்டு லட்ச ரூபா பெறுமான நகை, ரெண்டாவது முழுமையாக நம்பிய வேலைக்காரி திருடிட்டாளே என்பது, இந்த ரெண்டிலே எது உங்களை அதிகமா பாதிக்குது?"

 " அதுவா.....? வந்து,...ரெண்டும்தான்! இல்லே, இல்லே, நம்பினவ மோசம் பண்ணிட்டாளே என்பதுதான்......."

 " அதாவது, ரெண்டு லட்ச ரூபா பெறுமான நகையை மறுபடியும் கடைக்குப் போய், பணத்தைக் கொடுத்து வாங்கிடலாம், பணமும் நிறையவே இருக்கு,....."

 " ஆமாம்......"

 " சரி, இப்ப வேற ஒரு கோணத்திலே பார்ப்போம், உங்க மனசு வேதனைப்படுவது எதுக்கு?"

 " இதென்ன கேள்வி! எனக்குச் சொந்தமான ஒரு பொருளை வேற ஒருத்தி எப்படி என் அனுமதி இல்லாம எடுத்துக்கொண்டு போகலாம்?"

 " இந்த எண்ணம்தான் உங்க புலம்பலுக்கு ஆதாரம், சரியா?"

 " நிச்சயமா!"

 " இந்த நகை ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு சொந்தமாயிருந்ததா, அல்லது சமீபத்திலே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.