கவனிக்கவேண்டாமா?"
" என் உறவுக்காரன் ஒருவனை பார்க்க வந்தேன். பிறகு பார்த்துக் கொள்கிறேன். நீங்க கிளம்புங்க!"
" குருஜீ! என் வீடுவரையில் என்னுடன் வந்து விட்டுப்போங்களேன், ப்ளீஸ்!"
இருவரும் அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் அம்மா தன் உள்ளங்கைகளில் வைரத்தோடுகளை வைத்துக்கொண்டு கண்களை கோபமாக உருட்டிக்கொண்டு வழியை மறித்து இடுப்பில் கைவைத்து நின்றுகொண்டிருந்தாள்.
" பார்! நன்றாகப் பார்! இந்த வைரத்தோடுகளைத் தானே வேலைக்காரி திருடிட்டான்னு புலம்பினே, சொல்லு!"
சரஸ்வதி தாவிச்சென்று அந்த வைரத்தோடுகளை தன் கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டே, தன் தாயை ஏறிட்டுப் பார்த்தாள்.
" இது எப்படி வந்ததுன்னு கேட்கறியா? நீதான், பத்திரமா, உன் குளியலறையில் சோப் பாக்ஸிலே பிறையிலே பத்திரமா வைச்சிருந்திருக்கே, இன்று உன் பாத்ரூமை சுத்தம் செய்யும்போது, கண்ணில் பட்டுது!.........."
சரஸ்வதி என்னைப் பார்த்து தலை குனிந்தாள்.
" நம் ஒவ்வொருவரையுமே இப்படித்தான் நமது ஈகோ ஆட்டி வைக்கிறது, இதைப் புரிந்துகொண்டு உடனடியாக நாம் திருந்தி வாழவேண்டும்!"