வளர்த்துக்கணும்!"
" அது சரிங்க, இந்தம்மாவுக்கு இந்த நிலைமை வந்திருக்கிறது, பரிதாபமாகத்தான் இருக்கு...... "
" திரும்பவும் சொல்றேன், இந்தம்மாவுக்கு ஏற்பட்டமாதிரி அதிர்ச்சி, யாருக்கு வேணுன்னாலும், இல்லை, வேண்டான்னாலும், ஏற்படலாம்....இந்தம்மா வீட்டிலே வேலை செய்துவந்தவங்க, ஒருநாள் இந்தம்மாவுடைய வைரத்தோடுகளை திருடிக்கிட்டு ஓடிட்டாங்க போலிருக்கு, அந்த அதிர்ச்சியைத்தான் இவங்க மனசு ஏற்றுக்கமுடியாம, புலம்பித் தவிக்குது......."
" சார்! இந்தம்மா யார், எந்த வீடு, எல்லாம் எனக்கு தெரியுங்க......."
" அப்படியா?"
" ஆமாம், சார்! இவங்க பெரிய பணக்காரங்க! மூன்றுமாடி பங்களாவிலே வசிக்கறாங்க! என்னோட ஷேர் ஆட்டோவிலே அஞ்சோட ஆறாவது பேரா சவாரி பண்றாங்களேன்னு ஏமாந்துறாதீங்க!"
" அப்படியா? சொல்லு, சொல்லு! சுவாரசியமா இருக்கே.........."
" இந்தம்மா பரம்பரையா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவங்க! நிறைய படிச்சவங்க! காலேஜிலே புரொபசரா வேலை பார்க்கறாங்க!"
" என்ன சொல்றே, தர்மன்! என்னாலே நம்பவே முடியலியே......"
" பாவம் சார்! இவங்க வாழ்க்கையே ஒரு சோகக் கதைங்க!"
" இந்தம்மா, நல்லவேளையா நாம பேசறதை கவனிக்காம, தனக்குத்தானே, புலம்பிக்கிட்டிருக்காங்க! நீ கதையை சொல்லு!"
" இந்தம்மாவை பெற்ற தாயின் பரம்பரை சொத்துக்காக, அவங்களை ஒருத்தன் அவங்களை கல்யாணம் செய்துகிட்டு, இந்தம்மா பிறந்தபிறகு, கிடைத்த பணத்தை சுருட்டிக்கிட்டு வேறு ஒருத்தியோட ஓடிட்டாங்க!"
" அடப்பாவி!"
" ஒருவேளை, அவங்களும் இவங்களைப்போல பைத்தியமோ என்னவோ, யாருக்குத் தெரியும்? அதனாலே, புருஷன்காரன் தாங்கமுடியாம ஓடிட்டானோ என்னவோ, உண்மை தெரியாம நாம அவனை குற்றம் சொல்வது தப்புங்க!"
" பலே! பலே! நான் சொன்ன பாடத்தை எனக்கே திருப்பிட்டியே, கெட்டிக்காரன்யா நீ!"
" தப்பு, தப்பு, நீங்க நிறைய படிச்சவங்க! நான் பத்தாங் கிளாஸ் ஃபெயில்!"
" தர்மன்! படிப்புக்கும் அறிவுக்கும் எப்பவுமே நேரடி தொடர்பு இருக்கும்னு சொல்ல முடியாது, ஏன்னா படிப்புங்கறது, உலக ஞானம், விஷயங்களை தெரிந்துகொள்வது, நடைமுறை பழக்கங்களை கற்றுக்கொள்வது, ஆனால் அறிவு வேறு!"