ஒரு முன் எச்சரிக்கை தான்.." முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " ஒரு வாரம் முன்னர் தான் வினியை ஜல அபிஷேகம் செய்திருந்தாள் பாரதி...
வினி பலமாக சிரித்தபடியே கணக்குல இருக்கு டி.. இன்னைக்கு இல்ல பட் என்னைக்கு இருந்தாலும் பாக்கி செட்டல் பண்ணப்படும் எனக்கூற.. அப்போ பார்த்துக்கலாம்.. ஆமா அம்மணி அதிகாலையிலேயே என்னை நாடி வந்ததன் பின்புலம் என்னவோ.. என பாரதி கண்சிமிட்ட அம்மா வெண்பொங்கல் பண்ணிருக்காங்கடி ..உனக்கு பிடிக்குமேனு உன்னை அம்மா கூப்பிட சொன்னாங்க..
வாவ் இதை சொல்லாமல் என்ன வெட்டிப் பேச்சு..வைட் டென் மினிட்ஸ்ல வாரேன் என கூறியபடியே குளியலறைக்கு ஓடினாள்... பாரதியும் வினிதாவும் ரொம்பவும் நெருங்கிய தோழிகள்.. இருவரும் தங்களுக்குள் செல்ல சண்டைகள் இட்டாலும் அடுத்தவரிடம் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை..
வினி வீட்டிலே காலையுணவை முடித்துவிட்டு வெட்டி அரட்டையில் மும்முரமாக இருக்கையில் விஷ்வா வர இருவரும் குஷி ஆகிவிட்டனர்.
இவர்களை கண்டவுடன் வேண்டுமென்றே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வந்தான்..
விஷ்வா என்னாச்சி, என்ன சொன்னாங்க ? சரிபண்ணிட்டாங்களா? என இருவரும் கேட்க விஷ்வாவோ நெக்ஸ்ட் வீக்என்ட் தான் கொடுக்க முடியும் னு சொன்னாங்க.. எனக்கூறி பாரதியின் முகத்தை ஆராய பாரதி சற்று சோகமானாலும் அதை வெளிப்படுத்தாமல் அப்போ என்னால் இந்த வீக்என்ட் வரமுடியாதுல.. எனக் கூறியபடி வினி அவளை அழைத்தும் செவிசாய்க்காமல் வீட்டு வாசல் வரை வந்துவிட்டாள்... அவர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள் அருகில் என்றிருக்கையில் அவள் ஆசை மட்டும் கனவு போல் கலைந்ததால் தாங்கவும் முடியவில்லை அதை வெளிப்படுத்தவும் முடியவில்லை..அதனாலேயே வந்துவிட்டாள் .. வந்ததும் வாசலில் உள்ள சைக்கிள்ளைக் கண்டதும் அவள் ஆனந்தத்திற்கு அளவே இல்லை..
ஹேய் விஷ்வா .. பொய் சொன்னதும் இல்லாமல் எக்டிங் வேறயா..? பரவாயில்லை சுமாரான பர்பாமென்ஸ் தான் என கண் சிமிட்டியபடி தாங்ஸ்டா .. டூ மினிட்ஸ் இரு எனக்கூறிவிட்டு அவளது வீட்டிற்கு சென்று சிட்டாய் ஓடி வந்தாள்.. விஷ்வாவிற்கு தெரியும் அவள் எதற்காக சென்றாள் என்பது..இரண்டு பேனாக்களை புன்னகையுடன் நீட்ட விஷ்வாவோ அப்போ மேடம் ரொம்ப ஹாப்பி..நானும் ஏன்னா இத்தோடு என்னிடம் செவண்டி பை பென்ஸ்.. எல்லாம் தாங்களின் செவகனாய் ஊதியம் பெற்றவை எனக்கூறி