இதுவெல்லாம் செட் ஆகுமா..? என சிரித்தப்படி கூறிவிட்டு அவனைக்கடந்து சென்றுவிட்டாள் அவனது பாரதி...காதலனாய் வேண்டாம் நட்பெனும் காவலனாய் வா.. காலமெல்லாம் உன் தோழியாய் நானே வருகிறேன் என்று கூறிச்செல்கிறாள்... நண்பன் எனும் கவசத்தை உடைத்துவிட்டு மீண்டும் அணிய அவன் காதல் கொண்ட மனம் ஒப்பவில்லை..அவள் மனதை மாற்றவே
நினைத்தான்..அதற்காக சில உருப்படாத யோசனைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது அவனது நண்பர் கூட்டம்..
சில நாட்களின் பின்னர் இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தை இருந்தாலும் முன்பு போல் இருக்கவில்லை.. விஷ்வா பாரதியை விடுவதாய் இல்லை .. வினி பாரதியின் அரட்டையில் ஐக்கியமானாலும் பாரதிக்கு மட்டும் புரியும் படி இருபொருள் பட பேசுவான்..பாரதி தான் அதனால் சங்கடப்படுவாள்... அவள் அவை எதையும் பொருட்படுத்தவில்லை என்றால் கேலி பேசுவதுபோல் வேண்டுமென்றே கோபப்படுத்துவான்..அவள் தன்னை அலட்சியப்படுத்துகிறாள் என்ற ஆதங்கமே இவ்வாறு வெளிப்படும்..பாரதி தன்வீட்டில் இருந்தாலும் வினியை கூப்பிடும் சாக்கில் வருவான் .. எதையாவது கூறி கடுப்பேற்றிவிட்டு செல்வான்..
ஒருமுறை டியுஷனுக்கு செல்வதற்கு வினி வரும் வரை பாரதி காத்திருக்க விஷ்வா அருகில் வர..ச்சே இன்னைக்கு என்ன ஏழரையை கூட்டப்போறானோ என எண்ணியபடி இருக்க பாரதி..என புன்மறுவலோடு சாக்லைட் பார் ஒன்றை நீட்டினான்.. பாரதியோ அமைதியாக நிற்க அவன் மேலும் வற்புறுத்தவே விஷ்வா எனக்கு வேண்டாம்.. இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. ஏன் இப்படி மாறிட்ட.. உன் கிளாஸ் பசங்க நான் வரும்போதும் போகும் போதும் உன் பேரைச் சொல்றானுங்க..என்னடா இது ..எனக்கு கஷ்டமாக இருக்கு ... என பாரதி கூற அப்போ நீ வேண்டாம்னு சொன்னப்போ எனக்கு எப்படி வலித்தது.. என் லவ்வை ஏற்றுக்கொள்ளேன்..உனக்குப் பிடித்த விஷ்வாவாக மாறுகிறேன் எனக்கூறி சாக்லைட்டை அவள் கைகளில் திணிக்க அவள் ஆத்திரத்தில் உன்னை எனக்கு பிடிக்கலை நீயும்..வேண்டாம் உன் சாக்லைட்டும் வேண்டாம் என்று கூறி தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டாள்..
விஷ்வாவின் நடவடிக்கைகளினால் வினி வீட்டிற்கு செல்வதை மிகவும் குறைத்துக்கொண்டாள்.. வினியும் பாரதியும் பாரதி வீட்டிலே அரட்டை, வீட்டுப்பாடம் என ஒன்றாய் நேரத்தை செலவழித்தனர்..
பாரதி .. அண்ணா கிளாஸ் பசங்க ரொம்ப மோசம்ல்ல எனக் கூற "உன் அண்ணா மட்டும்