அவனது அறைக்குச் செல்ல பாரதியோ மறந்திருக்கலாம் என எண்ணியபடி அவர்களின் அரட்டை கச்சேரியை தொடர்ந்தனர்.. நேரம் ஆகவே வீட்டிற்கு செல்ல வெளியே வந்தாள்.. விஷ்வாவும் அவளை தொடர்ந்து வந்து பாரதி..! என அழைக்க அவள் என்ன என்பது போல் நிற்க சிவப்பு ரோஜா செடியொன்றை நீட்டினான்.. அவள் ஆர்வத்துடன் எனக்கா..? கியூட் ஆ இருக்குல்ல.. கண்களில் ஆனந்தத்தினை சேமித்து கேட்க ..ஆமா தாத்தா வீட்டில் பார்த்தேன்.. உடனே நீ தான் நினைவில் வந்தாய்... உன் ரோஜா செடி செத்துடுச்சினு பீல் பண்ணல்ல..அதனால் தான் உனக்காக கொண்டு வந்தேன்..என்றான் உண்மை அன்புடன்.. தாங்ஸ் லீடர்.. உங்க அன்பை கண்டு வியக்கிறேன்..அதனால் வன் வீக்ட நோட்சை நானே எழுதித்தருகிறேன்..என சிரித்தபடி சென்றுவிட்டாள்.. தெளிந்த நீரோடையாய் அவர்கிடையிலான நட்பு சென்று கொண்டிருந்தது..காதல் என்ற ஒற்றை வார்த்தை இவர்களிடையே பிரவேசிக்கும் வரை..
விஷ்வா மற்றும் பாரதி பற்றிய வதந்திகளும் கிசுகிசுக்களும் அவ்வப்போது பாடசாலையில் பரவத்தான் செய்தது.. பாரதி தம் நட்பில் கொண்ட நம்பிக்கையினால் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை... விஷ்வா பாரதியின் மேல் கொண்டிருக்கும் அன்பின் பொருள் என்னவென்று ஆராயத்தொடங்கிவிட்டான்.. அது தோழமை மட்டும் தான் என்ற வரையறைக்குள் அடங்கமறுக்கவே ஆச்சரியப்பட்டான்.. இதன் பின்னர் பாரதியோடு பேசும் போதெல்லாம் சற்று தடுமாறினான்.. அவன் நட்பு வட்டமோ அது காதல் தான் என சூடம் ஏற்றிவிட அவனுள் இனம்புரியாத இரசாயன மாற்றத்தினால் அவனும் வெகுவாய் மாறித்தான் போனான்... பாரதியை தவிர்க்க முடியாமலும் முன்பு போல் பேசமுடியாமலும் அவன் அவஸ்த்தைப்பட்டான்..
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளும் பக்குவம் பாரதிக்கு இருக்கவில்லை.. ஆனால் விஷ்வாவின் விலகலை உணரத்தான் செய்தாள்..அது அவளுள் தாக்கம் செலுத்தியது என்னவோ உண்மை தான்.. அவனிடமே கூறுவாள் லீடர் ரொம்ப பிஸி ஆகிட்ட.. ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் நீ அடிச்சி விடும் ப்பீளா.. தானே.. ரொம்ப சீன் போடாதீங்க பாஸ்.. ஒருநாள் வசமாக சிக்குவல்ல ..அப்போ ஆண்டியிடம் போட்டுக்கொடுக்கிறேன் எனக்கூறியபடி சென்றுவிடுவாள்...
எத்தனை நாள் இதனை மறைக்க முடியும் என்று அவனுக்குமே தெரியவில்லை.. பாரதியிற்கும் தன் மேல் ஓர் ஈர்ப்பு இருப்பதாய் தான் அவனது புரிதல் இருந்தது.. அவளிடம் இதைச் சொல்ல வேண்டும் என தருணம் எதிர்பார்த்திருந்தான்..அதற்கான சந்தர்ப்பமும் வந்தது.. வெகு நேரமாய் காணவில்லையே என பாரதியைத் தேடி அவள்