ஊர் நியாயம்னே புரியவில்லை..எல்லாம் தலைகீழாக இல்லையா நம்ம சமூகத்தில் நடக்கின்றது.. என பாரதி கூறி முடிக்கையில் கீதாவிடமிருந்து ஒரு விசித்திரமான பார்வை..
பாரதி நீ ரொம்ப திங்க் பண்ற.. சமுதாயத்தில் சம்பிரதாயமாக மாறி போன ஒன்று.. பெற்றவர்கள் பொண்ணுக்காக விரும்பி கொடுக்குறாங்க நாம இதில் என்ன பண்ண முடியும் என கீதா கேட்க ம்மா.. விரும்பி கொடுப்பதில் தவறில்லை வேண்டுகோளின் அடிப்படையில் கொடுப்பது தான் தவறு.. மாற்றங்கள் தம்மிலிருந்தே உருவாக வேண்டும்.. அடுத்தவர் திருந்தும் போது நாம் மாறலாம்னு இருந்தால் நடப்பது ஏதுமில்லை என பாரதி கூற கீதா வேறுவழியின்றி அவளின் கூற்றுக்கே தலை சாய்த்தார்..
பாரதி உன் ஒவ்வொரு தவிர்ப்புகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கில்லையா..? என்று கீதா கேட்கையில் அவர் அடுத்து எங்கே சென்று முடிப்பார் என்பதை யூகித்தே இருந்தாள் பாரதி.
ம்ம்.. என்று தலையசைக்க விஷ்வா விடயத்திலும் நியாயமான என்பதில் அழுத்தம் கொடுத்து காரணம் எதுவோ இருக்கில்லையா..? அதை மட்டும் ஏன் சொல்வதற்கு தயங்குறாயா..? இல்லை தவிர்க்கிறாயா..? என கீதா கேட்க எதிர்பார்த்த விடயம் என்றாலும் அதற்கு பதில் சொல்வதில் தயங்கவே செய்தாள்..
ம்மா வேண்டாமே.. சில உண்மைகளும் தவறுகளும் தெரியாதவரை தான் எல்லா உறவுகளும் நிலைப்பதும் நல்லபிப்பிராயம் இருப்பதும்.. இதுக்கு மேல எனக்கு எதுவும் சொல்வதற்கில்லை ம்மா... என்று பாரதி பட்டும் படாமலும் கூற கீதா எதுவோ நடந்திருக்கிறது அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் பாரதி மறைக்கிறாள்.. அதனை அவளாகவே கூற வேண்டும்.. அவள் தன் தாயிடமே மறைக்க வேண்டிய அவசியமென்ன.. பல சிந்தனைகள் அவரை துளைக்க பாரதி .. அம்மா மேல நம்பிக்கை இல்லையாடா..அப்படி இருந்தால் எதுவும் சொல்ல வேண்டாம்.. என்று பேச்சை நிறுத்தினார்..
ம்மா என்ன மா நீ இப்படி என்னவோ போல பேசுற என பாரதி தன் தாயின் கரங்களை இறுக்கமாக பிணைத்துக் கொண்டாள்.. ம்மா நீ பார்க்கும் விஷ்வா வேற நான் பார்த்த விஷ்வா வேற.. எல்லாருக்கும் போல விஷ்வா நல்லவனாய் எனக்கும் இருந்திருந்தால் இந்த கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிச்சிருக்க மாட்டேன்.. அவன் இப்போ மாறி இருக்கலாம் பட் என்னால அவனை ... அதற்கு பின்னால் எதுவும் கூற விரும்பாமல் ம்மா எனக்கு எப்படி உன்கிட்ட சொல்வது என்று கூட தெரியலைம்மா.. அவனை பார்த்தால் என்ன நினைத்தாலே உடம்பெல்லாம் கம்பளிபூச்சி ஊர்வது போல இருக்கு.. என்று அவள்