அதட்டவே மீண்டும் முனுமுனுத்தபடியே வேறுவழியின்றி அமர்ந்தாள்..
இம்முறை தந்தை சுற்றிவலைக்காமல் நேரடியாகவே விஷயத்தை கூறினார்.. விஷ்வா அம்மா வந்திருந்தாங்கல்ல விஷ்வாக்கு உன்னை கேட்டு தான் வந்திருந்தாங்க.. சுந்தர் கூட என்னிடம் கேட்டான் விஷ்வாக்கு உன் பொண்ணை கட்டிவைக்கலாமானு நான் அப்போ அப்புறம் பாக்கலாம்னு சொல்லிவிட்டேன்..வேற பல வரன் பார்த்திருக்காங்க பட் அவன் பிடிகொடுக்கவில்லையாம்.. அவன் உன்னை தான் நினைக்கிறான்.. அவனே சொன்னதால் தான் அவங்க அம்மாவும் வந்திருக்காங்க... எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு .. நான் சுந்தரிடம் என்ன சொல்ல என கேள்வியாய் நிறுத்தினார்...
இப்படியொரு சந்தர்ப்பம் வருமென்று அவள் கனவில் கூட கற்பனை பண்ணியதில்லை.. ஆவலோடு தன் பதிலை எதிர்ப்பார்க்கும் பெற்றோரிடம் எதை கூற என குழம்பியபடி தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள்... அப்பா எனக்கு இது சரியாக வரும்னு தோணலை.. இப்போதைக்கு கல்யாண பேச்சு வேண்டாமே எனக்கூற அவளது இப்பதிலை எதிர்ப்பார்க்கவில்லை..
ஏன் சரியாக வராதுன்னு சொல்ற.. கல்யாண பேச்சு எடுத்தாலே வேண்டாம்னு தான் சொல்வாய் அது தான் தெரியுமே.. இப்போ கல்யாண பேச்சு வேண்டாமா? இல்லை இந்த கல்யாண பேச்சு வேண்டாமா? என கீதா பாயிண்ட் பிடித்து பேச பாரதியோ சற்று அதிர்ந்தாலும் தன்னை சுதாகரித்துக்கொண்டு ம்ம்.. சரியாக சொல்லனும்னா இரண்டும் தான்..என சர்வசாதாரனமாக கூற கீதா கொதித்துவிட்டார்..!
உனக்கு எல்லாமே விளையாட்டாக போச்சு..நீ ஏற்கனவே பல வரன்களை நொண்டி சாக்கு சொல்லி தட்டிவிட்டிருக்க.. நீ சொன்ன எல்லா காரணங்களும் விஷ்வா விஷயத்துல இல்லையே பின்ன ஏன்டி வேண்டாம்னு சொல்லுற அதான் என்னால அக்சப்ட் பண்ணமுடியலை..! எல்லாம் உன் அப்பா கொடுக்கும் செல்லம் தான் என அவளது தந்தை ராஜ்யையும் சாட அவரும் மனைவி பக்கமுள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ளவே செய்தார்..
ம்மா... பிடிக்கலைன்னா விடும்மா..! சும்மா அதையே பேசிகிட்டு என அவள் எரிச்சல் பட ராஜ்உம் சற்று கடுப்பாகிவிட்டார்..இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் பாரதி..! ஏன் விஷ்வாவை வேண்டாம்னு ஒரே பிடியாய் நிற்கிறாய்..! எனக் கேட்க அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க கீதாவின் பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது..
பாரதி... உனக்கு கண்மணி போல நல்ல மாமியார் கிடைக்குமா? அதுவும் இனிமேல் நம்ம வீட்டு பக்கத்துலயே அவங்க வீட்டில் இருக்க போறாங்க .. உனக்கும் விஷ்வாவை சின்ன