(Reading time: 9 - 18 minutes)
Couple

சிறுகதை - தீர்வு உன் கையில்! - ரவை

சந்தா வேக வேகமாக காவல் நிலயம் நோக்கி நடந்தாள், புகார் கொடுக்க!

 எதிரே வந்துகொண்டிருந்த மூதாட்டி மங்களம், அவள் கண்ணில் படவில்லை!

 முதியவர்களின் சுபாவத்துக்கேற்ப, மங்களம் தடுத்து நிறுத்தினாள், வசந்தாவை!

 " பாட்டி! என்னை தடுக்காதே! நான் முக்கியமான வேலையா போய்க்கொண்டிருக்கிறேன்,........"

 " வசந்தா! நானும் கூட வருகிறேன், என் நடைக்கேற்ப, நீ கொஞ்சம் மெதுவாக நட! பேசிக்கொண்டே போகலாம்"

 வேண்டாவெறுப்புடன், வசந்தா நடையின் வேகத்தைக் குறைத்துக்கொண்டாள்.

 " இப்ப சொல்லு! வசந்தா! நீ எங்கே வேக வேகமா போயிண்டிருக்கே?"

 " காவல் நிலயத்துக்கு!"

 முதியவள் மங்களம் ஒருகணம் தடுமாறினாள்.

 " என்ன சொல்றே, போலீஸ் ஸ்டேஷனுக்கா? பொம்பளை போகிற இடமா அது? இரு இரு,நீ ஏதோ ஒரு ஆவேசத்திலே, கண்மண் தெரியாத கோபத்திலே, தப்பு பண்றியோன்னு பயமாயிருக்குடீ,ஒரு நிமிஷம்!என்ன விஷயம், யாருக்கு எதிரா புகார்னு சொல்லுடீ!"

 " எல்லாம் என் புருஷனுக்கு எதிராகத்தான்!"

 " அடிப்பாவி! குடியை கெடுத்தியே, நல்லவேளை! நான் வந்துவிட்டேன், எதுவாயிருந்தாலும், உனக்கு சந்தோஷமான முடிவு வருகிறமாதிரி, நான் அவனை மாற்றுகிறேன், இது சத்தியம்!"

 வசந்தா சற்று தளர்ந்தாள். இருவரும் அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டில் ஒதுங்கினர்.

 " உனக்கு இத்தனை கோபம் வருகிறமாதிரி, அப்படி என்ன செய்தான்?"

 " உன் பேரனையே போய் கேளு, அந்த வெட்கக்கேட்டை! நீ அவனை வெட்டியே போட்டிருப்பே......"

 " அவ்வளவு மோசமாவா நடந்துகிட்டான்!"

 " எவளோ ஒரு மேனாமினுக்கியை வீட்டுக்கு அழைத்துவந்து, அவளுக்கு என்னை சமைத்துப் போடச் சொல்றான், செருப்பாலேயே அடிக்கவேண்டாமா? ஆம்பிளைங்கிற திமிரிலேதானே, அப்படிச் செய்கிறான்? அதுதான், போலீஸிலே புகார் கொடுத்தால், அவங்க அவனை கவனிக்கிறபடி கவனிச்சு அனுப்புவாங்க, பாட்டி! என்னை தடுக்காதே! வழியை விடு!"

 " அடி விவரங்கெட்டவளே! நீ எதுக்காக போலீஸ்க்கு போறயோ, அங்கே அது கிடைக்காதுடீ! என்ன நடக்கும்னு சொல்றேன்!"

 " பாட்டி! நான் பத்தாவது படிச்சிருக்கேன், நீயோ பள்ளிக்கூடத்திலே மழைக்காக கூட ஒதுங்கினதில்லே, நீ எனக்கு சொல்லப் போறியா, சரி, சொல்லு! கேட்டுக்கிறேன்! எல்லாம் என் நேரம்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.