இல்லையான்னு அவளையே கேள்!"
" அப்படியா! ரொம்ப நியாயமாகத்தான் பேசியிருக்கே, அவளுக்குத்தான் புரிஞ்சிக்க முடியலே, சரி, உன் நியாயத்தை நான் ஒத்துக்கிறேன்,........"
" பாட்டின்னா பாட்டிதான்! உனக்கு இருக்கிற அறிவை அவளுக்கு கொஞ்சம் கடனாகத் தந்து ஒத்துக்கச் சொல்லு!"
" இரு, இரு, அவசரப்படாதே! அவளுக்காக நான் உன்னிடம் நீ சொல்கிற நியாயத்தையே அவளுக்கு நீ தரணும்னு சொல்றேன்..."
" என்ன சொல்றே, பாட்டி?"
" அவளாலே உனக்கு வாரிசு தரமுடியலேன்னு நீ வேறொருத்தியை வீட்டுக்கு கூட்டிவந்திருக்கே, அதே நியாயம் அவளுக்கும் உண்டு இல்லையா? அதை உன்னால் தரமுடியுமா?"
" விவரமா சொல்லு, பாட்டி!"
" உனக்கு மட்டும்தான் பத்து வருஷமா இல்லையா, வசந்தாவுக்கும் தான் இல்லே, வாரிசு, சரியா?"
" அதிலென்ன சந்தேகம், பாட்டி?"
" வசந்தாவினாலே வாரிசு தரமுடியலேன்னு நீ நினைக்கிறாமாதிரி, உன்னாலே தரமுடியலேன்னு வசந்தா நினைக்கிறதிலே தப்பில்லையே.....?"
" உம்...அது.....வந்து..."
" உன்னை ஒண்ணும் செய்யச் சொல்லலே! நீ எப்படி இன்னொருத்தியை வீட்டுக்குள்ளே கூட்டி வந்திருக்கியோ, அதே போல, வசந்தா ஒருத்தனை வீட்டுக்குள்ளே அழைத்துவந்து அவனோடு சேர்ந்து வாழ்ந்து வாரிசு பெற நினைச்சா, அதுவும் நீ சொல்கிற நியாயமும் ஒண்ணுதானே, செய்யட்டுமா?"
" நான் ஆம்பளை, அவ பொம்பளை......."
" சரிடா! அதை யார் இல்லேன்னு சொல்றாங்க! நியாயம் ரெண்டு பேருக்கும் பொது தானே? வசந்தா உன்னை தடுக்கமாட்டா, அதுபோல நீயும் அவளை தடுக்கக்கூடாது, நியாயந்தானே, பேராண்டி?"
வசந்தாவின் புருஷன் வேகமாக உள்ளே சென்று அந்த மேனாமினுக்கியை பணம் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு, பாட்டியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்!