சிறுகதை - இதுதான் உண்மை! - ரவை
நடிகை நிருபமாவுக்கு அப்படி ஒரு கோபம் வருமென எவருமே எதிர்பார்க்கவில்லை!
" தயவுசெய்து இனி என் வீட்டுக்கு எதற்காகவும் வராதீர்கள்! இதுவே நமது கடைசி சந்திப்பு!"
என்று கூறிவிட்டு உள்ளே சென்றவளைப் பார்த்து, திரைப்படத் துறையின் தலைமை தயாரிப்பாளர் தாமோதரன் அதிர்ச்சியில் உறைந்து போனார்!
ஒரு படம், இரண்டு படமல்ல; ஐந்து படங்கள் வரிசையாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கிற அரிய சந்தர்ப்பத்தை நிருபமாவுக்கு கொடுத்தவர் என்பது மட்டுமல்ல; பத்மாவை நிருபமா எனப் பெயர் மாற்றி, திரைவானில் நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவரே அவர்தான்!
இதற்கெல்லாம் மேலாக, அவளுடைய சம்பளத்தை பத்து கோடியாக உயர்த்தியவர் தாமோதரன்தான்!
மற்ற எந்த நடிகையும் இன்னும் ஒரு கோடியைக்கூடத் தொடவில்லை!
அப்படியென்ன கோபம், நிருபமாவுக்கு?
" ஐயா! நீங்க பெரியவங்க! என்னை இந்த உயரத்துக்கு அழைத்துவந்திருப்பவர் தாங்கள்! அதனால் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், ஹீரோ குமாரை உடனடியாக படத்திலிருந்து விலக்குங்கள்! வேறு யாரை வேண்டுமானாலும் ஹீரோவாக போடுங்கள்! நான் நடிக்கத் தயார்!"
" பத்மா! என் நிலைமையை கொஞ்சம் புரிந்துகொண்டு பேசும்மா! இது சரித்திரப் படம்; முன்னூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாதிக்குமேல் முடித்துவிட்ட படம்! இப்போது எப்படி குமாரை நீக்கி வேறு ஒருவரை போடமுடியும்? மீண்டும் முதலிலிருந்து படத்தை எடுக்கவேண்டுமென்றால், இருநூறு கோடி ரூபாய் அதிகம் செலவாகும், அது மட்டுமல்ல, இன்னும் பத்து மாதங்களில் முடியவேண்டிய படம், இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகும், பத்மா! ப்ளீஸ்!........."
" ஐயா! நீங்க சொல்வது எனக்குப் புரிகிறது, எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது! ஆனால் வேறு வழியே இல்லை, குமாருடன் இனி ஒருநாள்கூட நடிக்கமுடியாது......."
" அப்படியென்ன கோபம், அவன்மீது? என்ன நடந்தது, உங்களுக்குள்ளே?"
" தயவுசெய்து விவரங்களை கேட்காதீர்கள்!"
" பத்மா! நீ நடந்ததை எனக்கு சொன்னால்தானே, உன்னை என்னால் புரிந்துகொண்டு உன் விருப்பத்தை நிறைவேற்றமுடியும்?"
" ஐயா! கிராமத்தில் வளர்ந்த என்னை, சென்னைக்கு அழைத்துவந்து, படிக்கவைத்து, உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்துகிறீர்கள், கண்ணியமுடன்! ஒருநாள், ஒரே ஒரு முறைகூட, என்மீது தவறான எண்ணத்துடன் உங்கள் விரல்கூட என்மீது பட்டதில்லை, ஆனால் அந்தப் பொறுக்கி என்னை உடம்பில் தகாத இடத்தில் தொட்டு படுக்கைக்கு அழைக்கிறான்! இதை