செலுத்துவதை கருதவில்லை! எனக்கு சம்பளமாக கிடைக்கிற பணம், தெருவிலே போகிற குப்பனும் சுப்பனும், வீராயியும், காத்தாயியும் செலவழிக்கிற சினிமா டிக்கெட்டில் இருந்து கிடைக்கிற பணம்! அந்தப் பணத்தின் ஒரு பகுதியை திரும்பவும் அவர்களுக்கு வரி செலுத்துவதன்மூலம் தருகிறேன். ஆம், வரிப்பணத்தில் அரசு சமூகத்துக்கு அவசியமான கட்டுமானம், புதிய தொழில்கள், மின்சாரம், விவசாயத்தில் முன்னேற்றம், எல்லாம் செய்கிறார்கள்......."
" ஐ ஆம் ரியலி சாரி! உங்கள் பேச்சை இன்னும் கொஞ்ச நேரம் கேட்டால், என் மனம்கூட மாறிவிடும், நிச்சயமாக! வரேம்மா!"
என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்தார், ஆடிட்டர்!
நிருபமாவின் செயலாளர் தடாலென அவள் காலில் விழுந்தார்.
" என்னை மன்னிச்சிடுங்கம்மா! உங்களுக்கு ஒன்றும் தெரியாது, நடிக்கமட்டும் தான் தெரியும்னு தப்புக் கணக்கு போட்டிருந்தேன். ......"
" சரி, பரவாயில்லே, எனக்கு இந்த அளவு படிப்பும் பொது அறிவும் கிடைக்க உதவியவர் தயாரிப்பாளர் தாமோதரன்.........."
" அவரைப் போய் திட்டி அனுப்பிச்சிட்டீங்களே, யோசிக்காமல்........"
" யோசிக்காமல் பேசுவது இப்ப நீங்கதான்! உட்காருங்க! விவரமா சொல்றேன்,......
நான் நன்றி கெட்டவள் இல்லே, தாமோதரன் ஐயாவுக்கு கெடுதல் நினைக்கமாட்டேன், அதுபோல, அவருக்கு வேறு நபர் மூலமாக கெட்ட பெயர் ஏற்படவும் அனுமதிக்கமாட்டேன்,.....
அந்த அயோக்கிய ராஸ்கல் குமார் என்னிடம் தவறாக நடந்துகொண்டவனை இன்று கண்டிக்காமல் அவனை சும்மா விட்டால், அவன் மேன்மேலும் இதே தவறை செய்வான். எனக்கு அடுத்தது, மற்ற நடிகைகள், பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் தாமோதரன் ஐயாவின் மகள், மனைவியைக்கூட விட்டுவைக்க மாட்டான், புரிகிறதா? இன்று இருநூறு கோடி பணம் அதிகம் செலவாகுமே என யோசிக்கிறவர், அப்போதும் அப்படி யோசிக்கக் கூடாதில்லையா? இதெல்லாம் சகஜம் சினிமாத் துறையில் என்று சொல்லி தன்னை சமாதானப் படுத்திக் கொள்ளக் கூடாதில்லையா? அதற்குத்தான், கோபமாகப் பேசி அவரை யோசிக்க வைத்திருக்கிறேன், புரியுதா?"
" உங்க நல்லெண்ணம் எனக்குப் புரிவதுபோல, அவருக்கும் புரிந்தால் நல்லது, அப்படி நடக்காமல் அவர் உங்களை தன் படத்திலிருந்து நீக்கிவிட்டால்.......? மற்ற தயாரிப்பாளர்களிடமும் சொல்லி, உங்களை சினிமாத் துறையிலிருந்தே விரட்டிவிட்டால், உங்க எதிர்காலம், கேள்விக்குறியாகிவிடாதா?"