(Reading time: 8 - 16 minutes)

கட்டத்துக்குத் தாவியது.

 எனக்கேன் இந்த துயரம்? மற்றவர்கள் எல்லாம் மகிழ்வுடன் வாழும்போது, இறைவா! நான் என்ன பாவம் செய்தேன், எனக்கு மட்டும் ஏனிந்த நிலை?

 "என்னவோ உன் துயரத்துக்கு மூல காரணமே இறைவன்தான் என்பதுபோல, அவரை நொந்துகொள்கிறாயே, இது சரியா?" என்று என் அறிவு மனதைக் கேட்டபிறகு என் சிந்தனை அடுத்த கட்டத்துக்கு தாவியது.

 ஆமாம், இறைவன்தான் காரணம்! 'அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது' எனச் சொல்லியிருக்கிறார்களே, எல்லோரையும் ஆட்டிப் படைப்பவன் இறைவன்தானே?

 அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறதென, எந்த மனிதனாவது உறுதியாகச் சொல்லமுடியுமா? 'எல்லாம் அவன் செயல்' என்று ஞானிகளும் வேதாந்திகளும் சொல்வது தவறா?

 "எல்லாமே இறைவன் செய்கிறான் என்றால், உலகில் நடக்கிற கொலையும், களவும், கற்பழிப்பும்கூட இறைவன் செய்வதுதானா? அப்படியென்றால், மனிதனை ஏன் தண்டிக்கிறோம்?"

 அடுத்த கட்ட சிந்தனையில் கிடைத்த விடை:

 மகாகவி பாரதியின் வாக்கு நினைவுக்கு வந்தது, 'வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்!'

 உலகில் நடக்கிற நல்லது, கெட்டது எல்லாமே மாயை, உண்மையல்ல என்று ஆதி சங்கர்ர் முதலானோர் இதைத்தான் சொன்னார்களோ?

 இப்படி படிப்படியாக மனதின் தாறுமாறான போக்கை நிறுத்தி அதை என் ஆளுமைக்குள் கொண்டுவந்து இன்பம், துன்பம் என்பதே ஒரு கோலின் இருமுனைகள் என்றும் ஒன்றை மட்டும் அனுபவிக்கவே முடியாதெனவும் அறிவு சொன்னதை ஏற்று அமைதி பெற்றேன்.

 அந்த அமைதியே, நிலையான மாறாத இன்பம்! என்பதைத்தான் அமர்ர் கல்கி தனது பாட்டில் அழகாக கூறியிருக்கிறார் என புரிந்துகொண்டேன்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.