Page 6 of 6
எப்படி, நல்லமுறையில் வாழப்போகிறார்கள்?
என்னைப் பெற்ற தாய்க்குலத்துக்கு இது நான் செய்யவேண்டிய கடமையில்லையா?
இதைத்தான் என் குருநாதன் அன்றைக்கே கேட்டான், 'வேடிக்கை மனிதனாக நான் வீழ்வேனோ'ன்னு சவால் விட்டான்.
எங்க குடும்பத்திலே இப்ப நடப்பது, பெற்ற பாசத்துக்கும் சமூக கடமைக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தம்!
மகாபாரதக் கதையிலே பாண்டவர்கள் எப்படி எத்தனையோ இடர்ப்பாடுகளை கடந்து இறுதியில் தர்மத்தை நிலைநாட்டினார்களோ, அதுபோல நானும் பொறுமையாக இடர்களை எதிர்கொண்டு சாமர்த்தியமாக எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தர்மத்தை நிலைநாட்டுவேன், இது என் சபதம்!"