(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - எங்கேயோ பார்த்த முகம் - ரவை

திர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறது, ஆனால் தெளிவாக தெரியவில்லை என கல்பனா மண்டையை குடைந்துகொண்டாள்.

 பள்ளியில் தன்னுடன் படித்தவளா, காலேஜில் சேர்ந்து படித்தவளா, உறவுக்காரியா, புரியவில்லை!

 எதற்காக அவள் சேலைத் தலைப்பினால் தலை, முகம் மறைத்திருக்கிறாள், அவளைப் பார்த்தால் முஸ்லீம் பெண்ணாக தெரியவில்லை!

 யாரிடமும் எதுவும் பேசாமல், ரயில்பெட்டியின் ஜன்னல் வழியே வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 முகத்தை மறைத்திருந்த சேலை, மெலிதாக இருந்ததால், பாதி முகம் தெரிந்தது. ஒரு கண், ஒரு கன்னம், உதட்டின் ஒரு பாதி!

 சரி, எப்போதாவது எதற்காகவாவது, தன் முகத்தை திருப்புவாள், அப்போது கண்டுபிடித்துவிடலாம், என அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

 கல்பனாவின் உதவிக்கு, தெய்வமே அனுப்பியதுபோல, 'டிக்கட், டிக்கட்' என்றவாறு பரிசோதகர் வந்தார்.

 இப்போது திரும்பித்தானே ஆகவேண்டும், பார்த்துவிடலாம் முழுதாக அவள் முகத்தை! என கல்பனா ஆவலுடன் காத்திருந்தாள்.

 பரிசோதகரும் வந்தார், அவளிடம் கைநீட்டினார். அவளும் தனது டிக்கட்டை காட்டினாள்.

 ஆ! நிச்சயமாக இவளை நிச்சயமாக எங்கோ பார்த்திருக்கிறேன்!

 அந்த அழகான கண்கள் அவளை காட்டிக்கொடுத்தன!

 ஆமாம், ஏன் அவள் முகத்தின் ஒருபக்கம் தோலுரிந்து வித்தியாசமாக, கோணி, கண்கள் இடுங்கி, உதடு வளைந்திருக்கிறது?

 ஐயோ பாவம்! ஏதாவது தீவிபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட வடுவோ?

 தன்னுடன் பள்ளியில், ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை கூடப் படித்த எழிலரசியின் நினைவு வந்தது.

 எதிரில் அமர்ந்திருந்தவளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்து, கல்பனாவின் நினைவு எழிலரசிக்குத் தாவியது!

 ஆகா! அந்த நாட்கள், எப்போது நினைத்தாலும், மனதை குளிர்விக்கக்கூடிய, இனிய நாட்கள்!

 கூறைநாடு முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து படித்த நாட்கள் பசுமையாக நினைவில் நின்றிருந்தன.

 கல்பனாவின் வீடு, பள்ளிக்கு மிக அருமையில் இருந்ததால், அவளுடைய தோழிகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.