தேர்ந்தெடுக்க இருந்தபோது, உங்க மகனை செலக்ஷன் கமிட்டியிடம் என்ன சொல்லச் சொன்னீங்க, ஞாபகமிருக்கா? நான் சொல்றேன்,
பராசுரா என்னையும் கூட அழைத்துக் கொண்டு போய், அவங்க முன்பு நிறுத்தி, 'எனக்கு கொடுக்கிற வாய்ப்பை இவனுக்கு கொடுங்க! இவன் முழுநேரமும் கிரிக்கெட் விளையாடி படிப்பை விட்டுட்டான்.....அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க! அவன் நல்ல விளையாடலேன்னா, பிறகு என்னை கூப்பிடுங்கன்னு' உங்க பிள்ளையை வலியுறுத்தச் சொல்லாமலிருந்தால், இன்னிக்கும் நான் உதவாக்கரையாகவே இருந்திருப்பேன்......"
என்று உணர்ச்சிவசப்பட்டு, அழுதான்.
எல்லோரும் சேர்ந்து அவனை சமாதானப்படுத்தினோம்.
" அப்பா! என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்கு, அதனாலே, என் வருமானத்திலே பாதியை உங்க பெயரிலே எழுதி வைத்துவிடுகிறேன், அதை நீங்க மறுக்கக்கூடாது..."
" நட்புக்கு விலை பேசக்கூடாதுப்பா! இன்னிக்கும், எவ்வளவோ உயரத்துக்கு போனபிறகும், இங்கே எங்களை பார்க்க ஓடிவந்து, எதிரிலே நிற்கிறியே இதற்கு அந்தப் பணம் ஈடாகுமா? எங்க நட்பை அசிங்கப்படுத்தாதேடா, குழந்தை!"ன்னு என் அம்மா சொன்னபோது, அவள் காலில் விழுந்து வணங்கினான், அவன்!