பார்ப்போம்"
பரமசிவன் சிரித்துக்கொண்டே, தலையசைத்தான்!
தந்தையும் தாயும் தாங்கள் எப்படி தாயின் பர்த் டேயை மறந்தோம், மகன் எப்படி நினைவில் வைத்திருந்தான் என ஆச்சரியத்துடன், அவனை இருவரும் உச்சி முகர்ந்தனர்!
காலிங் பெல் ஒலித்தது! கதவை திறந்தான், மகன்! அவனுடைய நெருங்கிய நண்பன்!
" லேட்டாயிடுத்துடா, மேட்சுக்கு! கிளம்புடா!"
" மை காட்! இதோ ஒரே நிமிஷம்! அப்பா! ஆஸ்திரேலியா-இந்தியா கிரிக்கெட் மேட்ச் போய்ட்டு வரேன், பை!"
அடுத்த நிமிஷம் மகனும் அவன் நண்பனும் மறைந்தனர்!
இருவரும் ஸ்கூட்டரில் பறந்தனர்.
சிறிது நேரத்தில், தந்தைக்கு போன் கால் வந்தது, ஸ்கூட்டரில் சென்ற மகன் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறான்!
தாயும் தந்தையும் ஓடிப்போய், ஆஸ்பத்திரியில், மகனைப் பார்க்க காத்திருந்தனர். மகனுக்கு மண்டையில் பலத்த காயம்! அறுவை சிகிச்சை நடக்கிறது!
தாய் அதைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்தாள். அவளை உடனே சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அவளருகே, தந்தை! அவர் தைரியத்தை இழக்காமல் இறைவனுக்கு நன்றி சொன்னார்,
" இறைவா! தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போகட்டும்! மரகதம் இதற்குமேல் தாங்கமாட்டாள்"
பரமசிவன் பார்வதியை பார்த்தார்.
" அவன் ஜெயித்துவிட்டான், சோதனை போதும்" என்றாள்!