Page 4 of 4
அனுப்பும் போது நீங்க தான் எனக்காக பேசி மறுபடியும் படிக்க வைத்திங்க. நீங்க அன்றைக்கு எனக்கு கொடுத்த நம்பிக்கை இன்றைக்கு என்னை ஒரு பிரின்சிபால்லா நிறுத்தி இருக்கு. தைரியமாக போங்க, உங்கள் பேரனை நல்ல நிலைக்கு கொண்டு வருவது என் கடமை என்றவரை வாழ்த்தி நன்றி சொல்லி விட்டு புறப்பட்டார்கள் தாத்தாவும் கீதாவும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதி பலன் நமக்கு நிச்சயம் வந்து சேரும் அது நன்மையாயினும் தீமையாயினும் என்று கண்டு கொண்ட கீதா ஒரு முடிவோடு வெற்றி நடை போட்டு சென்றாள் தாத்தாவுடன்....