(Reading time: 9 - 17 minutes)

சிரித்தார்.

 கதிரவனின் அப்பா, முதல் முறையாக, பேசினார்:

" அண்ணே! எனக்கு நீங்க, உங்க தங்கை மகாலட்சுமியையே தந்திருக்கீங்க! அதைவிட பெரிய சீதனம் இருக்கா என்ன?"

 " சரி! அப்படின்னா, என் மகளை கதிரவன் கட்டிக்கப்போறானா, இல்லையா, சொல்லுங்க!"

 " அண்ணே! உண்மையை இன்னிக்குத்தான் நானே, கதிரவன் சொல்லி தெரிஞ்சிண்டேன். இன்னமும் உங்க தங்கைக்கு தெரியாது, உங்க மகள் மல்லிகா வேற ஒரு பையனை காதலிக்கிறாளாம். அதனாலே, கதிரவனை கட்டிக்க மாட்டாளாம்....."

 " மல்லிகாவின் சம்மதம் பெற்றால், கட்டிக்குவானா?"

 " என்னமோ அவன் பிடிவாதமா, மல்லிகாவை அவன் கட்டிக்க மாட்டானாம்"

 " ஏன்னு நான் சொல்றேன், இந்த போட்டோவை பாருங்க!"

 கதிரவன் ஒரு பெண்ணுடன் கைகோர்த்துக்கொண்டு பூங்கா வாசலில் சிரித்துக்கொண்டு நிற்பதை பார்த்து மகாலட்சுமியும் அவள் கணவனும் அதிர்ச்சியுற்றனர்.

 " அடப்பாவி! இவன் எவளையோ காதலிக்கிறதை மறைத்து, மல்லிகாவின்மீது அபாண்டமா பழி போடறானே!"

 " கதிரவனை திட்டாதீங்க! அவன் சொன்னதும் உண்மைதான். இதோ! இந்த போட்டோவை பாருங்க!"

 மல்லிகாவும் சண்முகமும் இணைந்திருப்பதை பார்த்து, இருவரும் திடுக்கிட்டனர்.

 " ஏன் அண்ணே! இதை முன்னமேயே எங்ககிட்ட சொல்லலே, தடுத்திருப்போமில்லே!"

 " இன்னமும் உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்றேன், கதிரவன் பக்கத்திலே நிற்கிற பெண்ணும், மல்லிகாவுடன் இருக்கிற இளைஞனும் அண்ணன்-தங்கை! இருவரும் நம்ம வையாபுரியின் பிள்ளைங்க! நல்ல குடும்பம்!

 காலம் கனியட்டும்னு சொல்லி கதிரவன் இதை தெரிவிப்பதைத்தான் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கான்......"

 " இப்ப என்ன செய்வது, அண்ணே?"

 " தங்கச்சி! காலம் ரொம்ப மாறிப்போச்சு! இப்பல்லாம் பிள்ளைங்களே தங்களுடைய ஜோடியை தேடிக்கிறாங்க, நமக்கு வேலை மிச்சம்!"

 " அது சரி, அண்ணே! நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்து வாழணும்னு நீங்க ஆசைப்பட்டது?"

 அண்ணாமலை வாய்விட்டு சிரித்தார்.

" தங்கச்சி! ரெண்டு குடும்பமில்லே, இப்ப மூணு குடும்பம் ஒண்ணா சேரப்போவுது, நம்ம ரெண்டு குடும்பத்தோட, வையாபுரி குடும்பமும் இணையப் போவுது, நமக்கு சந்தோஷம்! நம்ம பிள்ளைங்களுக்கும் சந்தோஷம்! எல்லாம் அவன் செயல்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.