சிரித்தார்.
கதிரவனின் அப்பா, முதல் முறையாக, பேசினார்:
" அண்ணே! எனக்கு நீங்க, உங்க தங்கை மகாலட்சுமியையே தந்திருக்கீங்க! அதைவிட பெரிய சீதனம் இருக்கா என்ன?"
" சரி! அப்படின்னா, என் மகளை கதிரவன் கட்டிக்கப்போறானா, இல்லையா, சொல்லுங்க!"
" அண்ணே! உண்மையை இன்னிக்குத்தான் நானே, கதிரவன் சொல்லி தெரிஞ்சிண்டேன். இன்னமும் உங்க தங்கைக்கு தெரியாது, உங்க மகள் மல்லிகா வேற ஒரு பையனை காதலிக்கிறாளாம். அதனாலே, கதிரவனை கட்டிக்க மாட்டாளாம்....."
" மல்லிகாவின் சம்மதம் பெற்றால், கட்டிக்குவானா?"
" என்னமோ அவன் பிடிவாதமா, மல்லிகாவை அவன் கட்டிக்க மாட்டானாம்"
" ஏன்னு நான் சொல்றேன், இந்த போட்டோவை பாருங்க!"
கதிரவன் ஒரு பெண்ணுடன் கைகோர்த்துக்கொண்டு பூங்கா வாசலில் சிரித்துக்கொண்டு நிற்பதை பார்த்து மகாலட்சுமியும் அவள் கணவனும் அதிர்ச்சியுற்றனர்.
" அடப்பாவி! இவன் எவளையோ காதலிக்கிறதை மறைத்து, மல்லிகாவின்மீது அபாண்டமா பழி போடறானே!"
" கதிரவனை திட்டாதீங்க! அவன் சொன்னதும் உண்மைதான். இதோ! இந்த போட்டோவை பாருங்க!"
மல்லிகாவும் சண்முகமும் இணைந்திருப்பதை பார்த்து, இருவரும் திடுக்கிட்டனர்.
" ஏன் அண்ணே! இதை முன்னமேயே எங்ககிட்ட சொல்லலே, தடுத்திருப்போமில்லே!"
" இன்னமும் உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்றேன், கதிரவன் பக்கத்திலே நிற்கிற பெண்ணும், மல்லிகாவுடன் இருக்கிற இளைஞனும் அண்ணன்-தங்கை! இருவரும் நம்ம வையாபுரியின் பிள்ளைங்க! நல்ல குடும்பம்!
காலம் கனியட்டும்னு சொல்லி கதிரவன் இதை தெரிவிப்பதைத்தான் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கான்......"
" இப்ப என்ன செய்வது, அண்ணே?"
" தங்கச்சி! காலம் ரொம்ப மாறிப்போச்சு! இப்பல்லாம் பிள்ளைங்களே தங்களுடைய ஜோடியை தேடிக்கிறாங்க, நமக்கு வேலை மிச்சம்!"
" அது சரி, அண்ணே! நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்து வாழணும்னு நீங்க ஆசைப்பட்டது?"
அண்ணாமலை வாய்விட்டு சிரித்தார்.
" தங்கச்சி! ரெண்டு குடும்பமில்லே, இப்ப மூணு குடும்பம் ஒண்ணா சேரப்போவுது, நம்ம ரெண்டு குடும்பத்தோட, வையாபுரி குடும்பமும் இணையப் போவுது, நமக்கு சந்தோஷம்! நம்ம பிள்ளைங்களுக்கும் சந்தோஷம்! எல்லாம் அவன் செயல்!"