(Reading time: 8 - 16 minutes)

 இவர்தான், இந்த வீட்டு ஓனர். சமீபத்திலே இவர் மனைவி காலமாயிட்டாங்க! இப்ப இவர் தனியாகத்தான் இருக்கிறார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நீங்க மூணுபேரும் இந்த வீட்டிலே இவர்கூட தங்கிக்கிட்டு, நீ நல்ல வேலையா தேடு, நாங்களும் உதவி செய்கிறோம், உன் தங்கைக்கு பொருத்தமான பையனாகப் பார்த்து அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் நாங்க உதவி செய்கிறோம்."

 அவன் எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டு, கண்கலங்க, பேசினான்.

 " சார்! அனாதைகளுக்கு ஆண்டவன் துணையிருப்பான்னு, சொல்வது நிரூபணமாயிடுத்து. இன்றிரவே கடலூருக்குப்போய், அம்மா, தங்கையை நாளைக்கே அழைத்துவரேன், உங்களோட இந்த வீட்டிலே தங்கி வாழ முழு சம்மதம். உங்க உதவியிலே சீக்கிரமே நான் நல்ல வேலை தேடிண்டு, வாழ்க்கையிலே செட்டிலாகி, வேற இடம் போயிடறோம்....வரேங்க!"

 அவன் வெளியேறியதும், பூமா பேசினான்.

 " எது, எப்போ, எங்கே, ஏன் நடக்குதுன்னு மனிதனாலே புரிஞ்சிக்கவே முடியாது. எல்லாம் மேலே இருக்கானே ஒருத்தன், அவன் செயல்!........"

 " பூமி! நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை! சற்றுமுன்புதான், சாமியிடம் புலம்பினேன், 'என் தனிமை தீர நீ ஒரு வழி காட்டலேன்னா, எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்'னு!

கைமேல் பலன்!"

 " உமா! இதிலே கூடுதலான விஷயம் என்னன்னா, நீ ஒரு குடும்பத்துக்கே துணையா இருக்கப்போறே! அவங்களும் உனக்கு துணையா இருப்பாங்க! மற்ற விஷயங்களை போகப்போக பார்ப்போம். கடவுளை நம்பறவங்களை அவர் கைவிடமாட்டார்........"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.