(Reading time: 8 - 16 minutes)

உயர்ந்தவனாகத் தெரிகிறான்!

 இன்று ஒருநாள் உனக்கு அவகாசம் தருகிறோம், நன்கு யோசித்துப்பார்!

 இதுவரையில் உன் வாழ்நாளில், கதிரவனை கைப்பிடித்ததற்கு முன்போ, பிறகோ, கல்லூரியில் படிக்கும்போதோ, பள்ளியில் படிக்கும்போதோ, ஒரு தவறுகூட செய்ததில்லை என நாளை காலை உன்னால் உறுதியாக சொல்லமுடிந்தால், நாங்கள் இனி இந்தப் பேச்சை எடுக்கவே மாட்டோம்.

 மாறாக, நீ சிறிதோ பெரிதோ தவறு செய்திருந்து அதை உணர்ந்து பின்பு திருந்தி வாழ்ந்திருப்பது சத்தியமானால், நாளை காலை, இந்த மாத, முதல் சனிக்கிழமை காலை, கதிரவன் இங்கே வரும்போது, நீ அவனை சிரித்த முகத்துடன் வரவேற்று, கண்ணனிடம் கதிரவனே அவன் 'அப்பா' என்பதை தெரிவிக்கவேண்டும்."

 அன்றிரவு கௌதமியின் நினைவு முழுவதும், தன்னைப் பெற்றவர்கள், தன்னைவிட, கதிரவனை எந்த அளவுக்கு கரெக்டாக மதிப்பீடு செய்திருக்கிறார்கள் என எண்ணி எண்ணி பிரமித்தாள்.

 பொழுது எப்போது விடியும் என ஏங்கினாள்!

 மறுநாள் காலை, வானில் உதயமான கதிரவனோடு, கௌதமியின் இதயத்தில் உதயமான புதிய கதிரவனும் வந்தனர், கௌதமியின் புது வாழ்வை துவக்கிவைக்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.