(Reading time: 10 - 19 minutes)

பணமில்லேன்னு கை விரிச்சிட்டாரு, ஊருக்கு திரும்பிப் போகச் சொல்லி, தங்கின இடத்திலிருந்தும் விரட்டிட்டாரு, ......"

 " ஊருக்குப் போயேன்"    "கையிலே காசில்லே, அங்கே போனாலும், குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்?"

 " அதெல்லாம் போகட்டும், வேலைக்காக என்னைத் தேடி ஏன் வந்தே?"

 " அரசாங்கத்திலே நீங்க வேலை பார்க்கிறதாக, கேட் கீப்பர் சொன்னாரு, அதான் நீங்க யாரிடமாவது சிபாரிசு செய்யணும்....."

 சங்கரன் வாணியை பார்த்து புன்னகை செய்தான்!

  வாணி, அந்தப் புன்னகையை சிக்னலாக கருதி, அவள் பேசினாள்:

"உன் பெயர் என்ன சொன்னே, மறந்துபோச்சே..?"

" சாரி, இன்னும் சொல்லவேயில்லே, என் பேரு ரம்பா!"

 " பொருத்தமா இருக்கு, நீ தங்கறதுக்கு இடமும், சாப்பாடும் நாங்க தரோம்!......."

   ரம்பா, வாணியின் கால்களைத் தொட்டு வணங்கினாள். அவள் கண்களில் புதிய நம்பிக்கை தெரிந்தது!

  " வீட்டிலே என்னோடு சமையல் வேலையிலே, உதவி செய்! எங்களாலே உனக்கு சம்பளமா எதுவும் தரமுடியாது!"

    " எனக்கு அடைக்கலம் தந்ததே போதும்மா!"

   " ஊரிலே, உன் குடும்பத்துக்கு பணம் எப்படி அனுப்புவே? பணமில்லாம, அவங்க பட்டினி கிடப்பாங்க, இல்லையா?"

    " எங்கப்பா ஏதோ சிறிது சம்பாதிக்கிறார், அந்த வருமானத்திலே, கஷ்டப்பட்டு குடும்பம் ஓடும்......"

   "அப்படியா? ஆமாம், நகைக்கடை திறந்ததும், உனக்கு மறுபடியும் வேலை தருவாங்க, இல்லையா?"

  " தெரியலீங்களே, இந்த கொரோனா எப்போ முழுக்கப் போகும், ஊரடங்கு எப்ப விலகும், எதுவும் தெரியலியே.....அம்மா! நகைக்கடை முதலாளி தப்பு செய்துட்டு இப்ப முழிக்கிறாரு,....."

 " என்ன தப்பு?"      " இந்தக் கடையிலே நல்ல வருமானம் கிடைத்ததும், குரோம்பேட்டையிலே ஒரு கடை, அண்ணாநகரிலே ஒரு கடை திறந்திருக்காரு, கையிலே இருக்கிற எல்லா பணம், வங்கியிலிருந்து பெற்ற கடன், எல்லா பணத்தையும் முதலீடு செய்து விட்டு, இப்ப, மூணு கடைகளும் மூடி, வருமானம் ஒரு பைசாகூட கிடைக்காமல், என்ன செய்வதுன்னு அவருக்கு தெரியலே! மூணு கடைகளும் வாடகை கட்டிடங்களிலே நடக்குது, வாடகை தந்தாகணும், ......."

 " பரவாயில்லையே, இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கியே......!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.