" முதலாளிக்கும் அவர் சம்சாரத்துக்கும் என்னிடம் பிரியம் உண்டு, ஊர்க்காரங்க! அவங்களோட நெருங்கிப் பழகுவேன், அதனாலே என்னிடம் ரகசியமா சொல்வாங்க!"
" நீ பேசாம, அவங்க வீட்டிலேயே தங்கிடறதானே?"
ரம்பா தலையை குனிந்துகொண்டாள்.
" என்னாச்சு?"
" முதலாளியை அவங்க சம்சாரம் நம்பமாட்டாங்க, ஏன்னா, அவருக்கு சபலபுத்தி! அதனால, அந்தம்மாதான், என்னை எங்கேயாவது வெளியிலே தங்கிக்கச் சொல்லி விரட்டிவிட்டுட்டாங்க!"
" ஓ! அந்தப் பிரச்னையா?"
" நீங்க, நல்லவங்க, உங்க வீட்டு ஐயாவை அப்படி கீழ்த்தரமா சந்தேகப்பட மாட்டீங்கன்னு தெரியுது, ஏன்னா, என்னை உங்களோட தங்கச் சொல்லிட்டீங்களே.."
சங்கரன் பெருமிதம் பிடிபடாமல், தலை நிமிர்த்தி சிரித்தான். " உம்...அவ பாராட்டினது என்னை, உங்களை இல்லே" " ஓ.கே. ஓ.கே." " மன்னிச்சுக்குங்க, ஏதோ தெரியாம பேசிட்டேன்........." " நாங்களும் அதே காரணத்துக்காகத்தான், உன்னை எங்களோடு தங்க வைச்சுக்கிறோம், ஏன்னா, வெளியிலே லோலோன்னு நாக்கை தொங்கப்போட்டு அலைகிற ஆம்பளைங்க, அதிகம்! உன்னை உருத் தெரியாம, குலைச்சிடுவாங்க! நீ தனியா வெளியிலே எந்தக் காரணத்துக்காகவும் போகாதே, புரியுதா?"
" நான் இப்பவே போய், என் பெட்டி, படுக்கையை எடுத்துண்டு வந்துடறேன்.."
" தனியா போகாதே! நம்ம ஐயா உன்னுடன் வருவாரு, ரெண்டு பேருமா போய்ட்டுவாங்க........!"
" சரிம்மா!" " போங்க, ரம்பாவுடன்! சீக்கிரம் வந்திருங்க, ஏகப்பட்ட வேலையிருக்கு.." சங்கரன், ரம்பாவுடன் கிளம்பினான்.
வெளியே சாலைக்கு வந்ததும், ரம்பா சிரித்தவாறே, சங்கரனை நெருங்கி வந்து, சொன்னாள். " அம்மா உங்களை ஏன் என்னுடன் அனுப்பினாங்கன்னு எனக்கு தெரியும்.....!" சங்கரன் அவளை கேள்விக்குறியுடன் பார்த்தான். " ஐயா! என்னை, அம்மா இன்னும் நம்பலே...உங்களை நம்பறாங்க, என்னை மட்டும் ஏன் நம்பமாட்டேங்கறாங்க?" என்றவாறே, சங்கரனின் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டாள்.
சங்கரனின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. அதை ரசித்து ஆனந்தத்தில் மிதந்தான்.
ரம்பாவின் முகத்தில் வெற்றிக்களிப்பு! " என்னை பிடிச்சிருக்கா?" சங்கரனுக்கு என்ன பதில் சொல்வதெனப் புரியவில்லை.
ரம்பா, இதுதான், அவனை வசப்படுத்த சரியான சமயம் என உணர்ந்து, அவன் இடுப்பை தன் கையால் சுற்றி இறுக்கினாள்.