உங்க குறைக்கு இங்கிலீஷ் வைத்தியம் ஏதும் பார்க்கலியா? தவிர, யுனானி,ஹோமியோபதி, ஆயுர்வேதம் எதுவும்பார்க்கலையா?"
" ரம்பா! அந்தச் சித்திரவதையினாலேதான், என் உடம்பே சிதறிடுச்சி! எல்லா வைத்தியமும் பார்த்து அலுத்துப்போச்சு! கோவில், குளம் சுற்றியாச்சு!"
" அம்மா! இதுக்கு நாட்டு வைத்தியத்திலே சிகிச்சை இருக்கு! எங்கப்பா ஒரு நாட்டுவைத்தியர்! அவர் சிகிச்சையிலே, எங்க ஊரிலே உங்களைப்போல ஒரு பொம்பளையை குணப்படுத்தி அந்தப் பொம்பளை இப்ப, ரெண்டு குழந்தைகளுக்குத் தாயாகிட்டா!
நல்லவேளை! எங்க ஊருக்குப் போக, ரயில், பஸ் போகத் துவங்கிடுச்சி!
ஐயா வேலைக்குப் போகணுங்கறதனாலே, நான் உடனே அம்மாவை எங்க ஊர் அழைச்சிகிட்டுப் போய், என் அப்பாவிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்கிறேன்!
நீங்க கும்பிடற கடவுள் உங்களை கைவிடமாட்டார்! நம்பிக்கையுடன் வாங்க! ஐயா! உறுதியா சொல்றேன், அம்மாவுக்கு தொடர்ந்து சிகிச்சை தர, எங்கப்பாவை இங்கேயே கூட்டிவரேன்! நீங்க அவரை குணம் தெரிந்த பிறகு அனுப்பினால் போதும்! அம்மா! இப்பவே கிளம்புங்க!"
" என்னங்க! கையிலே இருக்கிற பணத்தை ரம்பாவிடம் கொடுங்க, மிச்சத்தை பிறகு அனுப்புங்க! நாங்க வரோம்!"
" ஐயா! உங்க ரெண்டு பேருக்கும் பிறக்கப்போகிற பெண் குழந்தைக்கு ரம்பான்னு பெயர் வைங்க, அது போதும் எனக்கு!
நடந்துவிட்ட தப்புக்கு பொறுப்பேற்று நான் உங்க வேலைக்காரியாகவே இங்கே என் வாழ்வை கழிக்கிறேன்! இது சத்தியம்!"