மாலா அருகிலிருந்த அனாதைகள் இல்லத்தில் சேர்ந்து அங்கிருந்த பிள்ளைகளை பராமரித்தாள். மாலாவுக்கு பெல்லாவைத்தவிர ஒருவரும் இல்லை. பெல்லாவும் சில வருடங்களில் அதன் பதினாலாம் வயதில் இறந்துவிட்டது.
இறந்தபின் நாய்கள் சொர்க்கத்துக்குத்தான் செல்கின்றன. அவை மனிதன் செல்வதற்கு பல காலங்களுக்கு முன்னரே அங்கு சென்றுவிடுகின்றன.
அவளது கதையைக் கேட்கக் கேட்க எனக்கு வேதனையாக இருந்தது. அவள் கைகளை பிடித்தபடி "மாலா நீ என்னுடனே இருந்துவிடு! உனக்குச் சம்மதமென்றால் நானே உன்னை மணமுடிக்கிறேன்" என்றேன். அவள் ஆனந்த அதிர்ச்சியில் என்னைக் கட்டித் தழுவினாள்.
ஒரு நல்ல அன்பான முதல் நாய் இறந்தபின் வாழ்க்கை வெறுமையாகிவிடும். அதன் இடத்தை இன்னொரு நாயால் நிறப்ப முடியாது.
நான் விரும்பிய முதல் நாய் மாலாதான்! இப்போது இன்னொரு குட்டி நாய் நாங்கள் மூவரும் நடக்கப் போகிறோம். வழமைபோல் வின்ஸ்டன்தான் எமக்கு வழிகாட்டி. மாலா இப்போது அதனிடம் பொறாமைப் படுவதில்லை.
அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாள்.