ஜே.கே. சிரித்தான். " ஏன்டா சிரிக்கிறே?" " நினைத்தது ஒண்ணு, ஆனா நடந்ததோ வேறே!"
" என்னடா சொல்றே?"
" இப்ப நான் சொல்லப் போவதை ரகசியமா வச்சிக்க! அவர் என்னிடம் பர்சனலா பேச வந்தபோதுதான், நான் கண்ணை மூடியிருந்தேன், மேனேஜர் பெருமைக்காக என்னிடம் அப்படி பேசிவிட்டு உள்ளே அழைத்துப்போய் மன்னிப்பு கேட்டார்......"
" அப்படியா!" " யாரோ என் மூத்த மகனைப் பற்றி, அவரிடம் சொல்லி, தன் மகளுக்கு பொருத்தமாக இருக்கும்னு அவர் காதிலே போட்டிருக்காங்க!......." " அட்றா சக்கை! அப்பாடா! என்னாலே உன் பிரமோஷன் பறிபோயிடுத்தோன்னு பயந்து போய்ட்டேன்....." "மேனேஜரின் மகள், எம்.பில். பண்ணியிருக்காளாம், என் மகன் டாக்டரேட் படிச்சு அமெரிக்காவிலே நல்ல வேலையிலே இருக்கான், அதான், மேற்கொண்டு பேச இன்னும் கொஞ்ச நேரத்திலே மனைவியை கூட்டிண்டு என் வீட்டுக்கு வரப்போறார், சரி, நான் வரட்டுமா?"
ஜே.கே. வேகமாக சென்றான்.
பிரேம் நின்றவாறே அவனை பார்த்துக்கொண்டு இருந்தான்.
நாம் ஒன்று நினைக்க, வேறொன்று நடப்பதை எண்ணி, வியந்தான்.
மேனேஜர் சிவா, மனைவி பார்வதியுடன், கண்ணன்ராதா வீட்டுக்குள் நுழைந்தபோது, இருவரும் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர்.
" இதுதான் என் மனைவி ராதா!......"
" கண்ணன்-ராதா! பேர் பொருத்தம் பிரமாதம்! உம்.. இவள் என் மனைவி பார்வதி!"
" சார்! இந்தப் பெயர்கள் பொருத்தமும் பிரமாதம்!"
" கண்ணன்! இப்ப நான் உன் ஃபிரெண்டா உன் வீடு தேடி வந்திருக்கேன், என்னை 'சிவா'ன்னே கூப்பிடு! வயதும் எனக்கு குறைவு!"
" ஓ.கே. சார்!"
" பார்த்தியா, திரும்பவும் 'சார்'னு கூப்பிடறியே....."
" சிவா! உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்......உன் பொண்ணு பற்றின விவரங்களை சொல்!"
" நான் சொல்றேன், ராதா! நீயும் உட்கார்! எங்க மூத்த மகள் சீதாவுக்கு வரன் தேடுகிறோம், சீக்கிரமா அவ கல்யாணத்தைப் பண்ணிட ஆசை!
ஏன்னா, அவள் மேலே பி.எச்.டி. படிக்கணுங்கறா, இப்படி போயிண்டேயிருந்தா, கிழவி ஆயிடுவா, கல்யாணம் செய்துகொள்ளும் முன்பே!
அவளுக்கு இருபத்தைந்து வயது! மீடியம் ஹைட்! நார்மல் பில்ட்! நிறம், என்னைப்போல