உன் உடம்பிலிருந்து கிட்னியை அகற்ற, ரெண்டு மணி நேர ஆபரேஷன் செய்வாங்க, ஒருநாள் படுக்க வச்சிருப்பாங்க!
அவ்வளவுதான்! உன் கைக்கு பணம் வந்ததும், நீ வீட்டுக்குப் போகலாம்.
இதேபோல, உன்கூட பிறந்தவங்களும் தந்து பணம் பெறலாம்.
தவிர, இதுக்கு நீ ஆள் பிடிச்சுக் கொடுத்தேன்னா, ஒவ்வொரு ஆளுக்கும் ஆயிரக் கணக்கிலே கமிஷன் வாங்கித் தரேன், என்ன சொல்றே?"
" எப்ப போகலாம் சார்?"
" வெரி குட்! இனிமே நீயோ உன் குடும்பமோ வறுமையிலே வாடவேண்டிய அவசியமில்லே! உனக்கு நல்ல காலம் பொறந்திடுச்சி!"
எனக்கும் நம்பிக்கை பிறந்துவிட்டது! இதுதான் என் வாழ்வின் திருப்பம்! இதற்குத்தான் இறைவன் என் உயிரை அன்று காப்பாற்றி யிருக்கான்னு, புரிந்தது!
என் மூலமா, குடும்பமே வாழப் போகுது! பிறந்த பயன் கிடைத்துவிட்டது!
கூடுதலாக, இன்னொரு உயிரை வேறு வாழவைக்கப் போகிறேன், எத்தனை பெரிய புண்ணியம்!
மறுபடியும் டூவீலரில் ஏறி அமர்ந்து, ஆஸ்பத்திரிக்குப் போனதும், உள்ளே நுழையும் போதே, தெரிந்தது சேகரின் மதிப்பு!
ஊழியர்களும், நர்ஸும், வணக்கம் செலுத்தினர்.
என்னை ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, சேகர் " குமரா! அரை மணி நேரத்திலே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்து உன்னை கூட்டிக்கிட்டுப் போறேன். இங்கேயே இரு!"
சேகர் நகர்ந்ததும், ஒரு நர்ஸ் குமரனிடம் நெருங்கி வந்து, இரத்த அழுத்தம் சோதித்தவாறே, கிசுகிசுத்த குரலில்,
"நீ செய்யறது, நல்லது தான், ஒரு உயிரை வாழ வைக்கப் போறே! ஆனா, இந்த சேகர் ஒரு பக்கா ஃபிராடு! உன் கண்ணிலே காசை காட்டாம, எல்லாப் பணத்தையும் அவனே சுருட்டி ஏப்பம் விட்டுடுவான், உஷாரா இரு!"
" இப்ப என்ன செய்ய?"
" நீ உதவி செய்யப் போகிற நபரை காட்டச் சொல்லு! அந்த நபரிடம் நீயே பேசி, பணத்தை நீ வாங்கி, உன் பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சத்தை சேகரிடம் கொடு!"
" அப்படியே செய்றேன்." சிறிது நேரத்தில், சேகர் வந்து குமரனை ஒரு டாக்டரிடம் அழைத்துப் போனான்.
அவர் என்னென்னமோ டெஸ்ட் பண்ணிட்டு, சேகரிடம் பேசினார்.