Page 4 of 4
ஒரு கவிதையாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அப்பொழுதுதான் பேருந்தில் சுசியை பார்த்தேன். சுசிலா என் கணவரின் தகுதிக்கேற்ற மனைவி.என் கணவர் கேட்ட அனைத்தும் இருந்தும் குழந்தை இல்லையாம்.
எனக்கு கவலையாக தான் இருந்தது. என்னவரின் வாழ்க்கை சிறக்கத்தானே நான் விலகிவந்தேன்.
நான் சுசியிடம் கூறினேன் மனச விட்றாத சுசி ஆண்டவன் உனக்கு குழந்தைய குடுப்பான். கவலப்படாம இரு. என்று ஆறுதல் மொழி பலக் கூறி அவளுக்கு ஒரு பிடிப்பைக் கொண்டுவந்தேன்.
அவளது நிறுத்தம் வர,
என்னை பார்த்து தேங்க்ஸ் - கா நான் நல்லா இருப்பனோ!!! இல்லையோ!!!! நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க - கா என்று கூறி என் பிள்ளையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவள் விடைப் பெற, நான் கண்ணீருடன் வழியனுப்பினேன்.