(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”நீயிருக்கறப்ப கேட்டா சரியா வராது, நான் கிளம்பறேன் அப்புறமா வந்து கமலாம்மாகிட்ட கேட்டுக்கறேன்”

  

”டேய் படவா இங்க வா அதென்ன நான் இல்லாதப்ப என் வீட்டு பொம்பளைகிட்ட கதை பேசறது தப்பு, எதுவாயிருந்தாலும் என்முன்னாடி பேசு”

  

”இல்லை வர்ற வழியில போஸ்ட்மேனைப் பார்த்தேன்”

  

”சரி“

  

”உன் வீட்டுக்கு லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாப்பல”

  

”என் வீட்டுக்கா அவன் எவன்டா என் வீட்டுக்கு லெட்டர் அனுப்பறது”

  

”அதை தெரிஞ்சிக்கதான் வந்தேன்” என சொல்லியவன் கமலாவை பார்க்க கதிரேசனும் சந்தேகத்துடன் தன் மனைவியைப் பார்த்து

  

”ஓஹோ அந்த லெட்டரைதான் மறைச்சி வைச்சிருக்கியோ எடு அதை, கொடு யார் அனுப்பினது”

  

”அது யாரோங்க நமக்காக வந்ததில்லை”

  

”நீ பொய் சொல்லமாட்டேன்னு எனக்குத் தெரியும், உனக்கு சரியா கூட பொய் சொல்ல வரலைல்ல, நான் வந்தப்பவே பார்த்தேன் நீ எதையோ வைச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருந்த, கொடு அதை யார் அனுப்பினா அந்த லெட்டரை“

  

”இல்லைங்க வேணாம்ங்க நீங்க வேற ஊருக்குப் போய் வந்திருக்கீங்க, சோர்வா இருப்பீங்க இருங்க காபி தண்ணி தரேன் குடிப்பீங்க”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.