”உண்மையைச் சொல்றேன் அவங்க வெளிநாட்டுக்கு போகப் போறாங்களாம், கடைசியா உன்னைப் பார்க்க வராங்களாம், நீ அவங்களை ஏத்துக்கிட்டா உன்கூட இருப்பாங்களாம், இல்லைன்னா கிளம்பி வெளிநாடு போயிடுவாங்களாம்”
”வெளிநாட்டுக்கா”
”ஆமாம்”
”கடல் தாண்டியா”
”ஆமாம்”
”அப்ப அவ்ளோதானா”
”அவ்ளோதான்”
”ம் நான் எவ்ளோ செல்லம் கொட்டி வளர்த்தேனே, இப்படி கடல்தாண்டி போறானாமா“
”நீ போகாதேன்னு சொன்னா போக மாட்டான் சொல்லிப்பாரு”
”ம்க்கும் காதலே வேணாம்னு சொன்னேன், கேட்டானா அப்ப கேட்கலை இப்ப நான் போகாதன்னு சொன்னா மட்டும் கேட்டிருவானோ”
”அப்ப இருந்த சூழ்நிலை வேற காதல் கண்ணை மறைச்சிடுச்சி, உன் பேச்சை கேட்கலை, இப்பவும் அப்படியே இருப்பானா, அவனும் ஒரு பையனுக்கு அப்பனாச்சே, ஒரு அப்பனோட வலியை இப்ப அவரு உணர்ந்திருக்கலாம், அதனால உன்கிட்ட வர நினைக்கறாரு, வந்தவரை ஏத்துக்கய்யா நீ ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட”
”என்னத்த ஏத்துக்கறது எனக்குப் பிடிக்கலை”