”ஆமா இந்த வீரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, சின்ன புள்ளைகிட்ட வீரத்தை காட்டி என்னத்த வாரி கொட்டிக்கப் போற”
”சின்ன புள்ளன்னா எம்புட்டு வயசு இருக்கும்“
”என்னத்த 5 வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சின்னாலும், இப்ப அந்த புள்ளைக்கு ஒரு 3 வயசு இருக்கும், நடக்கறான், ஓடறான், நல்லா பேசறான்”
”என்ன இருந்தாலும் அவன் வேத்தாளுதானே”
”எப்படி சொல்ற”
”அவன் அம்மா உங்க மதமாச்சே”
”இருக்கட்டும் ஏன் நாங்க எல்லாம் மனுஷங்க இல்லையா”
”நான் அதைச் சொல்ல வரலை”
”யோவ் எதுவாயிருந்தாலும் நேரா பேசுமய்யா, கிறிஸ்துவ பெண்ணை மருமகளா ஏத்துக்க உனக்கு மனசு வரலை அதானே”
”ஆமாம்”
”நீ திருந்தவே மாட்ட சரி போ, உன் புள்ளையே 5 வருஷம் கழிச்சி ஊருக்கு வராப்ல, நீ இப்படியே வீம்புபிடிச்சி வந்தவங்களை விரட்டிடாதய்யா, அப்புறம் நீ ரொம்ப வருத்தப்படுவ, அதுக்கப்புறம் நீ ஆசைப்பட்டா கூட அவங்களை பார்க்க முடியாது”
”எலேய் என்னத்த உளறி வைக்கற”