(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

இயேசுவைத் தொழுவதை தவிர வேறு இன்பமில்லை

  

என கமலா பாட மற்றவர்கள் கோரஸாக

  

ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்

  

மேரி மேரி கிறிஸ்துமஸ் என மகிழ்ச்சியாக பாடினார்கள்

  

கதிரேசன் குடும்பத்தினரின் இந்த மனமாற்றம் பலருக்கு புதிதாக இருந்தது, யாரெல்லாம் வீம்புடன் இருந்தார்களோ அவர்களுக்கு கதிரேசன் ஒரு பாடமாக இருந்தார். ராபர்ட்டும் கதிரேசனை நினைத்து பெருமைக் கொண்டான், முதல் முறை அவரை பெரிசு என அழைக்காமல் தாத்தா என அழைத்தான். தன் வீட்டில் பண்டிகையை கொண்டாமல் கதிரேசன் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடினான். கதிரேசனின் மகனும் தன் தந்தையின் மனமாற்றத்தால் அவருடனே இருந்துவிடலாம், வெளிநாடு செல்லவேண்டாம் என முடிவு எடுத்தான், அதைச் சொல்லவும் அனைவரும் மகிழ்ந்தார்கள்.

  

கதிரேசனுக்கு கை வலி எடுத்தாலும் கூட தன் பேரனை கீழே தரையில் வி்டவில்லை, அன்பாக பார்த்துக் கொண்டார், எப்படி தன் மகனை பார்த்துக் கொண்டாரோ அதை விட பலமடங்கு செல்லமாக பார்க்கலானார். பண்டிகைக்காக சர்ச் செல்லவேண்டும் என சொல்ல கதிரேசன் முகம் சுளிக்காமல் அதற்கும் ஒப்புக் கொண்டார். குடும்பமாக ராபர்ட்டையும் சேர்த்துக் கொண்டு சர்ச் சென்று கடவுளிடம் நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினார். எது எப்படியோ 5 வருடங்கள் கழிந்தாலும் கதிரேசன் குடும்பத்திற்கு கிறஸ்துமஸ் பண்டிகையால் இழந்த மகிழ்ச்சி திரும்ப கிடைத்தது, விட்டுப்போன சொந்தமும் சேர்ந்துக் கொண்டது.

      

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  

-சுபம்-

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.