“இந்த வயசில உனக்கு விளையாட்டு தேவையா”
”டேய் நான் ஒண்ணும் வயசானவன் இல்லை”
”சரி சரி பேரனை எடுத்துட்ட, உன் முகத்தை கண்ணாடியில பாரு தலையெல்லாம் வெள்ளை முடி, மீசை கூட நரைச்சிடுச்சி, இன்னும் நீ இளமையானவன்னு சொல்லிட்டு அலையற, அப்ப நான்லாம் என்னவாம்”
”நீயா நீ குழந்தைடா”
”ம்க்கும் இதை மட்டும் என் அப்பன்ட்ட சொல்லிடாத, அப்புறம் எனக்கு கல்யாணம் செய்து வைக்க மாட்டான்“
”சரி சொல்லலை நீ சொன்னியே சான்டான்னு ஒரு ஆளு”
”ஆமாம்”
“அவரு இப்ப எங்க இருப்பாரு”
”எதுக்கு கேட்கற”
”ஒண்ணுமில்லை நைட் நம்ம வீட்டுக்கு அவரை வந்து போகச் சொல்லு”
”அவர் எதுக்கு உன் வீட்டுக்கு வரனும்“
”என் புள்ளை வரான், என் விட்லதானே விழாவை கொண்டாடப்போறான், அப்ப அவர் இல்லைன்னா எப்படி””
”அப்படியா இதப்பாரு பெரிசு அவராதான் வரனும், நாம கூப்பிட்டாலாம் வரமாட்டாரு”