”இப்படி சொன்னா எப்படி” என அதிர்ச்சியுடன் கதிரேசன் கேட்க
”இதப்பாரு இதுவரைக்கும் நானே அவரை பார்த்ததில்லை, சான்டா வருவார்ன்னு சொல்வாங்க அவ்ளோதான்”
”அப்ப பரிசு பொருளை யார் தருவா“
”என் அப்பா எனக்குத் தருவாரு”
”அப்படியா அப்ப சான்டா வரமாட்டாரா”
“உன் வீட்டுக்கு வரமாட்டாரு”
”அவர் வரலைன்னா என் பேரன் வருத்தப்படுவானே”
”அதுக்கென்ன செய்றது, நீ 5 வருஷம் வீம்பு பிடிச்சி புள்ளையை பிரிச்சி வைச்சல்ல, அதான் சான்டா உன் மேல கோச்சிக்கிட்டுருப்பாரு”
“அட அப்படியா சரி சரி அவர்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொல்லு”
”அதெல்லாம் சொல்ல முடியாது”
”அப்ப நானே சொல்லிக்கிறேன்”
“எப்படி சொல்லுவ”
”எல்லாம் சொல்வேன் போடா” என சொல்லிக் கொண்டே அவர் சென்றுவிட ராபர்ட்டுக்கு எதுவும் விளங்கவில்லை. குழம்பித் தவித்தான்.