இருந்தேன்”
”ஓஹோ இவள்தான் மலரா”
”ஆமாம் அவள் கொஞ்சம் அப்படித்தான் கண்டிப்பா நடந்துக்குவா ஆனா, நல்லதுதானே சொல்லிட்டுப் போறா”
”இருந்தாலும் சரவணனுக்கு ஊசின்னா பயம் அதான் பார்க்கிறேன்”
”அந்த பயத்தை எல்லாம் மலர் போக்கிடுவா, நீங்க கவலையேப் படாதீங்க சரி பொண்ணு வந்துட்டா நைட் ஏதாவது சமைக்கனும் நான் கிளம்பறேன்”
”இருங்க இருங்க அதான் மலர் சொன்னதை செய்ய சரவணன் போயிருக்கானே, இன்னிக்கு எங்க வீட்டு டின்னர் சாப்பிடுங்க”
”எதுக்கு உங்களுக்கு சிரமம்“
”இதுல சிரமப்பட என்ன இருக்கு, என் பையன் நல்லதுக்காக இவ்ளோ தூரம் பேசறீங்களே இதுவே பெரிசு, உட்காருங்க பேசுவோம் டின்னர் ரெடியானதும் சாப்பிடலாம்” என சொல்ல அவரும் சரியென்றார்.
கிச்சனில் சரவணனோ நொந்துக் கொண்டும் மலரை திட்டிக் கொண்டும் அவளுக்கு பிடித்ததை சமைத்துக் கொண்டிருந்தான்
நேரம் சென்றது மலரின் தந்தையோ வெளியூரிலிருந்து வீடு திரும்பினார், கணவரைக் கண்டதும் சந்தியாவும் வைதேகியிடம்
”அட அவர் ஊர்ல இருந்து வந்துட்டாருங்க சரி சரி நான் போய் பார்க்கிறேன்”
”ஓ தாராளமா போங்க சரவணனே டின்னர் கொண்டு வந்து தருவான்” என சொல்ல சந்தியாவும் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றுவிட வைதேகியும் சரவணனை தேடி கிச்சனுக்கு செல்ல