செய்றான்னு அம்மா பின்னாடியே சுத்தறான்”
”அப்பா அவர் வேணும்னேதான் அப்படி நடந்துக்கறாரு, அதுக்கு காரணம் இருக்கு ஆன்ட்டிக்காகதான் இப்படி நடந்துக்கிறாரு, அவங்க மனசு நோககூடாதுன்னு நினைக்கறாரு ,அதுக்காகவே குழந்தை போலவே நடந்துக்கறாரு, ஆனா என்கிட்ட குழந்தையை போல நடக்கலைப்பா நல்லாதான் என்னை பார்த்துக்கறாரு, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நீங்க பார்த்து வைச்ச டாக்டர் மாப்பிள்ளை கூட என்னை இந்தளவுக்கு பார்த்துக்க மாட்டாருப்பா, அவர் பின்னாடிதான் நான் அலைஞ்சிருக்கனும், இப்ப பாருங்க நான் சந்தோஷமா இருக்கேன், இதுதானேப்பா உங்களுக்கும் தேவை” என சொல்ல அதற்கு ரவியும் ஆம் என்பது போல் தலையாட்டினார்.
மறுநாள் பொழுது விடிந்தது புத்தாண்டு பிறந்தது
காலையில் வீட்டு வாசலில் வைதேகியும் மலரும் புத்தாடை அணிந்து கோலமிட அவர்களுக்கு உதவியாக இருந்தான் சரவணன்
”அதுக்கு இந்த கலர் நல்லாயிருக்கும்” என சொல்ல மலர் இடும் வண்ண கோலத்திற்கு வண்ணங்களை தேர்வு செய்து கொடுத்துக் கொண்டிருக்க சந்தியாவும் கோலம் போடாமலே அதை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்க காபி இன்னும் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் ரவி வீட்டிற்கு வெளியே வந்து நடப்பதை கவனமாக பார்த்துவிட்டு சந்தியாவிடம் வந்தார்
”காபிக்காக அங்க நான் காத்திருக்கேன், நீ போய் அரை மணி நேரமாச்சி கோலம் போடாம பக்கத்து வீட்டை வேடிக்கைப் பார்க்கற”
”அங்க பாருங்களேன் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க, அங்க பாருங்க மாப்பிள்ளையை அவரேதான் கலர்லாம் எடுத்து தராரு”
”இப்ப என்ன அதுக்கு நீயும் கலர் கோலம் போடப்போறியா”
”நீங்க கலர் எடுத்து தர்றதா இருந்தா நானும் பெரிசா ரங்கோலி போடுவேன்”